எரிமலை குமுறிக் கொண்டிருக்கும் ஐஸ்லாந்தில் பூகம்பம்
ஐஸ்லாந்தில் எரிமலை குமுறிக் கொண்டிருக்கும் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
ஐஸ்லாந்தின் அய்ஜாப்ஜல்லாஜோகல் பகுதியில் உள்ள எரிமலை வெடித்து பெரும் சாம்பலைக் கக்கிக் கொண்டிருக்கிறது. இதனால் ஐரோப்பிய வான்வெளியின் பெரும் பகுதியில் சாம்பல் மண்டலம் சூழ்ந்திருப்பதால் விமானப் போக்குரவத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், எரிமலை உள்ள பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் பீதி ஏற்பட்டுள்ளது.
