ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது சென்னை சூப்பர் கிங்ஸ்
நவி மும்பை டிஒய் பாட்டீல் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த ஐபிஎல் இறுதிப் போட்டியில் 3வது சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ்.
டாஸ் வென்ற டோணி, முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். தொடக்க வீரர்களான ஹெய்டனும் விஜய்யும் பெரிய ஸ்கோரை நோக்கி அடித்து ஆட ஆரம்பித்தனர். 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு சென்னை அணி 168 ரன்கள் எடுத்தது.
அடுத்து களம் இறங்கிய மும்பை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்தது.
சுரேஷ் ரெய்னா ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சாம்பியன் பட்டத்தை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரூ. 6 கோடி பரிசாக கிடைத்தது. 2வது இடத்தைப் பிடித்த முமபைக்கு ரூ. 3 கோடி பரிசு கிடைத்தது.
கலை நிகழ்ச்சிகளுடன் ஐபிஎல் தொடர் விமரிசையாக நிறைவுக்கு வந்தது. இந்த நிகழ்ச்சிக்கு இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.
பிபாஷா பாசுவின் நடனமும், ஷாஹித் கபூரின் ஆட்டமும் ரசிகர்களை மகிழ்வித்தது.
