சீனாவில் வேர்ல்டு எக்ஸ்போ 2010 பிரமாண்ட துவக்கம்!
ஷாங்காய்: உலகின் பல நாடுகளிலிருந்தும் பல கோடி மக்கள் குவியும் வேர்ல்டு எக்ஸ்போ 2010 வெள்ளிக்கிழமை துவங்கியது. இந்த கண்காட்சிக்கு ஒரு நாளைக்கு 4 லட்சம் மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சர்வதேச கண்காட்சி உலகின் மறக்க முடியாத நிகழ்வாக அமையும் என்று, வேர்ல்டு எக்ஸ்போ துவக்க விழாவில் பங்கேற்ற சீன அதிபர் ஹூ ஜிண்டாவ் தெரிவித்தார்.

