சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி
மும்பை டிஒய் பாட்டீல் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த ஐ .பி.ல் கிரிக்கெட் போட்டியில் ஹைதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் அணியுடன் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி விளையாடி 38 ரன்கள் வித்தியாசத்தில், அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.
முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் டெக்கானின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறிப் போனது. டோணி மற்றும் பத்ரிநாத்தின் சிறப்பான, ஆட்டத்தால் 7 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்தனர்.
அடுத்து களமிறங்கிய டெக்கான் சார்ஜர்ஸ் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி அதிரடி பந்து வீச்சீல் 19.2 ஓவர்களில் 104 ரன்களை மட்டும் எடுத்து தோல்வியில் முடிந்தது. போலிங்கர் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

