சோயப்பிடம் போலீஸ் விசாரணை- பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டது
ஆயிஷாவுக்கும், தனக்கும் திருமண ஒப்பந்தப் பத்திரம் ஏற்படுத்தப்பட்டது உண்மை, தான் அதில் கையெழுத்துப் போட்டது உண்மை என்று சோயப் மாலிக் நேற்று முதல் முறையாக ஒப்புக் கொண்டார். இதையடுத்து ஆயிஷாவின் தந்தை ஹைதராபாத் போலீஸில் ஒரு புகார் கொடுத்தார்.
பஞ்சாரா ஹில்ஸ் காவல் நிலையத்தில் ஆயிஷாவின் தந்தை இந்தப் புகாரைக் கொடுத்துள்ளார். இதையடுத்து சோயப் மாலிக் மீது மோசடி, வரதட்சணைக் கொடுமை, கிரிமினல் சதிச் செயல் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சோயப் மட்டுமல்லாமல் அவரது மைத்துனர் இம்ரான் மீதும் புகார் தரப்பட்டுள்ளது.


