தமிழில் நிறைய நடிக்க ஆசை- ஐஸ்வர்யா ராய்
தமிழில் நிறையப் படங்களில் எதிர்காலத்தில் நடிப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது என்று கூறியுள்ளார் ஐஸ்வர்யா ராய்.
உலக அழகிப் பட்டம் வென்ற பின்னர் சினிமாவுக்குள் நுழைந்தார் ஐஸ்வர்யா. ஜீன்ஸ் படத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார்.
தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் எந்திரன் படத்தில் நடித்துக் கொண்டுள்ள ஐஸ்வர்யா, மணிரத்தினத்தின் இயக்கத்தில் ராவணன் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்த நிலையில் தமிழில் நடிப்பது மிகவும் சவுகரியமாக இருப்பதாக கூறியுள்ள ஐஸ்வர்யா எதிர்காலத்தில் நிறையத் தமிழ்ப் படங்களில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

