நித்தியானந்தா கைதானது குறித்து பரபரப்பு தகவல்கள்
சாமியார் நித்தியானந்தா கைதானது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகை ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருந்த ஆதார செய்திகள் வெளியானதில் இருந்து தலைமறைவாக இருந்தார் நித்யானந்தா. நித்தியானந்தா தலைமறைவாகி விட்டதால் அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. நித்தியானந்தாவை கைது செய்வதில் பெங்களூரூ போலீசார் முனைப்புடன் செயல்பட்டு வந்தனர்.
இந்நிலையில், நித்தியானந்த இமாச்சலபிரசேத்தில் தலைமறைவாக இருந்து வருவது பற்றி போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, நித்தியானந்தாவை கர்நாடக போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள நித்யானந்தாவை காவலில் வைத்து விசாரிக்க கர்நாடக போலீசார் முடிவு செய்துள்ளனர்.
