Articles in கவிதைகள்
சோதனைகள்
இல்லாத வாழ்க்கையை
இறைவனிடம் வேண்டாதீர்.
சோதனைகள்
கசப்பானவை தான்.
ஆனால்
அவை இல்லாத வாழ்க்கையில்
சுவை இருப்பதில்லை.
சோதனைகளை
தாங்கும் வலிமையை
மட்டுமே இறைவனிடம்
வேண்டுங்கள்………..
இறைவனிடம்
“தாயை ஏன் படைத்தாய்? “
என்று கேட்டேன்..
இறைவன் சொன்னார்
“நான் ஒவ்வொருவருடனும்
இருக்க முடியாதே!
ஆதலால் தான்
தாயைப் படைத்தேன்” என்றார்.
“ உடன் பிறந்தோரை
ஏன் படைத்தாய்? “
என்று கேட்டேன்..
தனிமை சோகம்
வேண்டாம் என்றே
படைத்தேன் என்றார்.
“இத்தனையும்
படைத்த இறைவா!
காதலையும்
ஏன் படைத்தாய்?”
என்று கேட்டேன்..
“தவணை முறையில்
மரணத்தை பழக்கவே” என்றார்….
கனல் இருப்பதால் தான்
கதிரவனுக்கே மதிப்பு!.
மணம் இருப்பதால் தான்
மலர்களுக்கே மதிப்பு!.
நிலவு இருப்பதால் தான்
இரவுக்கே மதிப்பு!.
போராடும்குணம் இருப்பதால் தான்
மனிதா உனக்கும் மதிப்பு!!!!!!.
வழிகள் தெரியாமல்
என் விழிகள் கலங்கும் போதெல்லாம்
அவள் மொழிகள் தான்
எனக்கு வழி
காட்டும் கலங்கரை விளக்கங்கள்….
சோதனையின் வேதனையில்
நான் அழும்போதெல்லாம்
கைக்குட்டையாய் இருக்கும்
