August 5, 2010 – 11:57 pm | Comments Off

சூரிய சுனாமியால் பூமிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. பூமிக்கு மேலே உள்ள காந்த வளையம், வெப்பக் கதிர்களை உள்ளே விடாமல் தடுத்து விடும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதும் சூரிய சுனாமி குறித்து மக்களிடையே பெரும் ஆர்வம் ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம், பூமிக்கு என்னாகுமோ என்ற லேசான அச்சமும் …

Read the full story »
அறிவியல் அறிவோம்

Science facts -அறிவியல் உண்மைகள்

இந்தியா

National News – இந்திய செய்திகள்

உலகம்

World News – உலக-செய்திகள்

கட்டுரைகள்

Articles கட்டுரைகள்

கவிதைகள்

Poems-கவிதைகள்

Home » Archive by Category

Articles in கவிதைகள்

சோதனைகள்!!!
April 12, 2010 – 6:14 am | Comments Off

சோதனைகள்
இல்லாத வாழ்க்கையை 
இறைவனிடம் வேண்டாதீர்.

 
சோதனைகள்
கசப்பானவை தான்.
ஆனால் 
அவை இல்லாத வாழ்க்கையில் 
சுவை இருப்பதில்லை.
 
சோதனைகளை 
தாங்கும் வலிமையை 
மட்டுமே  இறைவனிடம்
வேண்டுங்கள்………..
   

ஏன் படைத்தாய் இறைவா?
April 9, 2010 – 3:44 am | Comments Off

 
இறைவனிடம்
“தாயை ஏன் படைத்தாய்? “
என்று கேட்டேன்..
இறைவன் சொன்னார்
“நான் ஒவ்வொருவருடனும்
இருக்க முடியாதே! 
ஆதலால்  தான்
தாயைப் படைத்தேன்” என்றார். 
 

“ உடன் பிறந்தோரை
 ஏன் படைத்தாய்? “
என்று கேட்டேன்..
தனிமை சோகம் 
வேண்டாம் என்றே 
படைத்தேன் என்றார்.
 

“இத்தனையும்
படைத்த இறைவா!
காதலையும்  
ஏன் படைத்தாய்?”
என்று கேட்டேன்..
“தவணை முறையில்
மரணத்தை பழக்கவே” என்றார்….
 
  
 

மதிப்பு
April 8, 2010 – 9:12 am | Comments Off

கனல்  இருப்பதால் தான்
கதிரவனுக்கே மதிப்பு!.

மணம்  இருப்பதால் தான்
மலர்களுக்கே மதிப்பு!.

நிலவு இருப்பதால் தான்
இரவுக்கே மதிப்பு!.

போராடும்குணம்  இருப்பதால் தான்
மனிதா உனக்கும் மதிப்பு!!!!!!.

பணம்
April 8, 2010 – 3:57 am | Comments Off
பணம்

 
 
பணம் என்பது
மனிதனை முடிந்தவரை
மிருகமாக மாற்ற
புறப்பட்ட காகிதத்தின் மறு பிம்பங்கள்….

என் தாய்
April 8, 2010 – 3:42 am | Comments Off
என் தாய்

வழிகள் தெரியாமல்
என் விழிகள் கலங்கும் போதெல்லாம்
அவள் மொழிகள் தான்
எனக்கு வழி 
காட்டும்  கலங்கரை விளக்கங்கள்….
 

சோதனையின் வேதனையில்
நான் அழும்போதெல்லாம்
கைக்குட்டையாய் இருக்கும்