<?xml version="1.0" encoding="utf-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>தமிழ்நாடு செய்திகள் - News in Tamil</title>
	<atom:link href="http://www.a2ztamilnadu.com/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>http://www.a2ztamilnadu.com</link>
	<description>தமிழ் செய்திகள் மற்றும் தமிழ்நாட்டு தகவல்கள்</description>
	<lastBuildDate>Mon, 06 Feb 2012 17:13:43 +0000</lastBuildDate>
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>http://wordpress.org/?v=3.2.1</generator>
		<item>
		<title>உத்தர பிரதேசம்</title>
		<link>http://www.a2ztamilnadu.com/tamilnews/%e0%ae%89%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d/</link>
		<comments>http://www.a2ztamilnadu.com/tamilnews/%e0%ae%89%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Mon, 06 Feb 2012 17:09:26 +0000</pubDate>
		<dc:creator>Kavitha</dc:creator>
				<category><![CDATA[தெரிந்து கொள்வோம்]]></category>

		<guid isPermaLink="false">http://www.a2ztamilnadu.com/?p=24231</guid>
		<description><![CDATA[உத்தர பிரதேசம், ஓர் அழகான மாநிலம். உத்தர பிரதேசத்தின் ஒவ்வொரு பகுதியும், ஓர் தனி உலகம் போல் இருக்கும். உத்தரப் பிரதேசம் 70 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த 70 மாவட்டங்கள் 17 ஆட்சிப் பிரிவுகளுள் அடங்கும். இப்பிரிவுகள் ஆக்ரா, அஸம்கர், அலகாபாத், கான்பூர், கோராக்பூர், சித்ரகூட், ஜான்சி, தேவிபதான், பைஸாபாத், பரைச், பரேலி, பஸ்தி, மிர்ஸாபூர், மொராதாபாத், மீரட், லக்னௌ, வாரணாசி, சஹரன்பூர். சின்ன வயதில் நாம் படித்த இந்திய வரலாறு, அனேகமாக உத்தர பிரதேசத்தின் வரலாறாகத் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://www.a2ztamilnadu.com/tamilnews/%e0%ae%89%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d/uttar_pradesh-2/" rel="attachment wp-att-24232"><img src="http://www.a2ztamilnadu.com/wp-content/uploads/2012/02/Uttar_Pradesh.png" alt="Uttar Pradesh" title="Uttar Pradesh" width="250" height="262" class="alignleft size-full wp-image-24232" /></a>உத்தர பிரதேசம், ஓர் அழகான மாநிலம். உத்தர பிரதேசத்தின் ஒவ்வொரு பகுதியும், ஓர் தனி உலகம் போல் இருக்கும். உத்தரப் பிரதேசம் 70 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த 70 மாவட்டங்கள் 17 ஆட்சிப் பிரிவுகளுள் அடங்கும். இப்பிரிவுகள் ஆக்ரா, அஸம்கர், அலகாபாத், கான்பூர், கோராக்பூர், சித்ரகூட், ஜான்சி, தேவிபதான், பைஸாபாத், பரைச், பரேலி, பஸ்தி, மிர்ஸாபூர், மொராதாபாத், மீரட், லக்னௌ, வாரணாசி, சஹரன்பூர்.</p>
<p>சின்ன வயதில் நாம் படித்த இந்திய வரலாறு, அனேகமாக உத்தர பிரதேசத்தின் வரலாறாகத் தான் இருந்திருக்கிறது.இந்திய அரசு முத்திரையான, நான்கு சிங்கங்களைக் கொண்ட சாரநாத் சிம்மத் தூண் இங்கு தான் இருக்கிறது. ராமாயணத்தில் பாதி கதை இங்கு தான் நடந்திருக்கிறது. வெள்ளையர்களுக்கு எதிரான சிப்பாய் புரட்சிக்கு வித்திட்ட மங்கள் பாண்டே, உத்தர பிரதேச மாநிலம் மீரட் கன்டோண்ட்மென்டைச் சேர்ந்தவர் தான். நாட்டின் மிகப் பெரிய புனித நதிகளான கங்கையும், யமுனையும், சரயு நதியும் உத்தர பிரதேசத்தை வளப்படுத்துகின்றன.இந்தியாவின் மிகப் பெரிய தொழில் நகரமாக கான்பூர் திகழ்கிறது. ஆட்டோ மொபைல் துறையில் பின்னி எடுக்கிறது. தோல் தொழில்களுக்கு தாயகமும் இதுவே. &#8220;ஹிஸ்டரி சமாச்சாரமெல்லாம் தெரியாது சார். நான் ஐ.டி., பார்ட்டியாக்கும்&#8217; என்கிறீர்களா? இந்தியத் தகவல் தொழில்நுட்பத் துறையின் தலைநகரான நொய்டாவும் உ.பி.,யில் தான் இருக்கிறது.</p>
<p>ஊர் சுற்றிப் பார்க்கலாம் என கிளம்பிவிட்டால், அயோத்தி (ராமர் ஆண்ட இடம்), மதுரா (கிருஷ்ணர் பிறந்த இடம்), அலிகர் (உலகப் புகழ் பெற்ற பல்கலைக் கழகம்), ஆக்ரா (சொல்ல வேண்டுமா, என்ன?), அலகாபாத், காசி என்று மிகப் பெரிய பட்டியலை வாசித்துக் கொண்டே போக வேண்டியது தான். வாழ்நாளில் ஒரு முறையேனும் காசிக்குப் போய்விட வேண்டும் என்பது இந்துக்களின் தணியாத தாகமாக இருக்கிறது. தமிழகத்தில் இருக்கும் பெரிய பெரிய ஜவுளிக் கடைக்காரர்களுக்கு இந்த புண்ணியம் அடிக்கடி கிடைக்கிறது, பனாரஸ் பட்டுப் புடவைகளைக் கொள்முதல் செய்ய வருவதால்!</p>
<p>இது தவிர, புத்த மதத்தைச் சேர்ந்தவர்களுக்கும் புனிதமான இடங்கள் இங்கு நிறைய இருக்கின்றன. புத்தர், முதன் முதலில் தனது சீடர்களைச் சந்தித்த இடமான சவுகண்டி ஸ்தூபி; புத்தர் தனது முதல் போதனையைத் துவக்கிய சாரநாத்; அவர் முக்தியடைந்த குஷி நகர். எல்லாமே இங்கு தான் இருக்கின்றன. இவை இந்தியாவில் பெரிய வரவேற்பைப் பெறாவிட்டாலும், ஜப்பான், சீனா, இலங்கை என, புத்த மதம் விரவியிருக்கும் உலக நாடுகளில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றவை. மாநிலம் முழுவதும் இந்தி தான். உருது தெரிந்தாலும் சமாளித்துவிடலாம். இந்துஸ்தானி சங்கீதத்தின் குரல்வளை இங்கு தான் இருக்கிறது. நடன வகைகளில் கதக் (கதகளி அல்ல), உத்தர பிரதேசத்துக்குச் சொந்தமானது தான். சப்பாத்தி, ரொட்டி, பருப்பு, அப்பளம் (பாப்பட்) தான் பிரதான சாப்பாடு. &#8220;ஸ்நாக்ஸ்&#8217; மற்றும் &#8220;சாட்&#8217; வகைகளில், உத்தர பிரதேத்துக்காரர்களை அடித்துக்கொள்ள ஆள் கிடையாது. சாயந்திர வேளைகளில், அதிகம் பேர் சமோசா, பாட்டி-சோக்கா, சோளா-பூரி சாப்பிடுகின்றனர்.</p>
<p>அது மட்டுமல்ல; இப்போது நம்மூரில் மட்டுமின்றி உலகளவில் பிரபலமாகிவிட்ட உணவு வகைகளான கபாப், கோப்தா, குருமா, கீமா, புலாவ், பிரியாணி, பராத்தா (நமது பாஷையில் புரோட்டா) எல்லாமே இங்கிருந்து கிளைத்தவை தான். இவை, பொதுப்படையாக மொகல் உணவு வகைகள் என்றழைக்கப்படுகின்றன. தீபாவளி, ஹோலி, தசாரா, ராம்லீலா, துர்கா பூஜா, சாத் பூஜா, ஈத், பக்ரீத், மொகரம் எல்லாம் மிகப் பெரிய அளவில் கொண்டாடப்படுபவை. </p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.a2ztamilnadu.com/tamilnews/%e0%ae%89%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>காதலில் சொதப்புவது எப்படி &#8211; Tamil Short Film Kadhalil eppadi Sothapuvadhu</title>
		<link>http://www.a2ztamilnadu.com/tamilnews/tamil-short-film-kadhalil-eppadi-sothapuvadhu/</link>
		<comments>http://www.a2ztamilnadu.com/tamilnews/tamil-short-film-kadhalil-eppadi-sothapuvadhu/#comments</comments>
		<pubDate>Mon, 06 Feb 2012 16:29:00 +0000</pubDate>
		<dc:creator>Kavitha</dc:creator>
				<category><![CDATA[Tamil Short Films]]></category>

		<guid isPermaLink="false">http://www.a2ztamilnadu.com/?p=24229</guid>
		<description><![CDATA[Tamil Short Film Kadhalil Sothapuvadhu eppadi directed by Balaji Mohan. Balaji Mohan directed directed many short films like Mittaai Veedu, Addi Tail etc. He is now directing a full-length bilingual film romantic comedy in Tamil as Kadhalil Sodhapuvadu Yeppadi and Telugu as &#8216;Love Failure&#8217; starring Siddharth and Amala Paul in the lead roles based on [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>Tamil Short Film Kadhalil Sothapuvadhu eppadi directed by Balaji Mohan. Balaji Mohan directed directed many short films like Mittaai Veedu, Addi Tail etc. He is now directing a full-length bilingual film romantic comedy in Tamil as Kadhalil Sodhapuvadu Yeppadi and Telugu as &#8216;Love Failure&#8217; starring Siddharth and Amala Paul in the lead roles based on his Tamil short film Kadhalil Sothapuvadhu eppadi.<br />
<object width="480" height="360"><param name="movie" value="http://www.youtube.com/v/tRSi-j7z8Wk?version=3&amp;hl=en_US&amp;rel=0"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/tRSi-j7z8Wk?version=3&amp;hl=en_US&amp;rel=0&#038;autoplay=1" type="application/x-shockwave-flash" width="480" height="360" allowscriptaccess="always" allowfullscreen="true"></embed></object></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.a2ztamilnadu.com/tamilnews/tamil-short-film-kadhalil-eppadi-sothapuvadhu/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் மீண்டும் பங்கேற்போம்- யுனிநார் செல்போன் நிறுவனம் அறிவிப்பு</title>
		<link>http://www.a2ztamilnadu.com/tamilnews/participate-spectrum-auction-again-yuninar-cell-phone-company-announcement/</link>
		<comments>http://www.a2ztamilnadu.com/tamilnews/participate-spectrum-auction-again-yuninar-cell-phone-company-announcement/#comments</comments>
		<pubDate>Mon, 06 Feb 2012 11:10:14 +0000</pubDate>
		<dc:creator>Tamil News</dc:creator>
				<category><![CDATA[வர்த்தகம்]]></category>

		<guid isPermaLink="false">http://www.a2ztamilnadu.com/?p=24224</guid>
		<description><![CDATA[ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் மீண்டும் பங்கேற்போம் என்று யூனிநார் நிறுவனம் அறிவித்தது. இந்தியாவில் நார்வேயைச் சேர்ந்த டெலி நார் மற்றும் யுனிடெக் உடன் இணைந்து யுனிநார் நிறுவனம் செல்போன் சேவையை வழங்கி வருகிறது. ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் யுனிநார் உள்பட 11 நிறுவனங்களின் 122 லைசென்சுகளை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்தது. ரத்து செய்யப்பட்ட லைசென்சுகள் மீண்டும் ஏலம் விடப்பட உள்ளன. இந்நிலையில் யுனிநார் நிறுவனத்தின் ஆசிய பிராந்திய நிர்வாக இயக்குனர் சிக்வி பிரெக்கே இன்று டெல்லியில் பேட்டி [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><a class="highslide" onclick="return vz.expand(this)" href="http://www.a2ztamilnadu.com/tamilnews/participate-spectrum-auction-again-yuninar-cell-phone-company-announcement/uninar-cell-phone/" rel="attachment wp-att-24226"><img class="alignleft size-thumbnail wp-image-24226" title="uninar cell phone" src="http://www.a2ztamilnadu.com/wp-content/uploads/2012/02/uninar-cell-phone-150x150.jpg" alt="" width="150" height="150" /></a>ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் மீண்டும் பங்கேற்போம் என்று யூனிநார் நிறுவனம் அறிவித்தது.</p>
<p>இந்தியாவில் நார்வேயைச் சேர்ந்த டெலி நார் மற்றும் யுனிடெக் உடன் இணைந்து யுனிநார் நிறுவனம் செல்போன் சேவையை வழங்கி வருகிறது.</p>
<p>ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் யுனிநார் உள்பட 11 நிறுவனங்களின் 122 லைசென்சுகளை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்தது. ரத்து செய்யப்பட்ட லைசென்சுகள் மீண்டும் ஏலம் விடப்பட உள்ளன.</p>
<p>இந்நிலையில் யுனிநார் நிறுவனத்தின் ஆசிய பிராந்திய நிர்வாக இயக்குனர் சிக்வி பிரெக்கே இன்று டெல்லியில் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-</p>
<p>2ஜி ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் மறு ஏலத்தில் நாங்கள் பங்கேற்போம். இது கொள்கை அளவிலான முடிவுதான். அதே சமயம் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று சொல்ல முடியாது. ஆகவே இந்திய செல்போன் சந்தையில் இருந்து யுனிநார் நிறுவனம் வெளியேற வாய்ப்பு இருக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை.</p>
<p>2ஜி ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ்களுக்கான அடிப்படை விலை அரசால் நிர்ணயிக்கப்பட்ட பின்னரே எத்தனை கட்டங்களுக்கான லைசென்ஸ் ஏலத்தில் பங்கேற்பது என்பதை சொல்ல முடியும் என்றார் அவர்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.a2ztamilnadu.com/tamilnews/participate-spectrum-auction-again-yuninar-cell-phone-company-announcement/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>கூடங்குளம் : உதயகுமாரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யக்கோரி மனு</title>
		<link>http://www.a2ztamilnadu.com/tamilnews/kutankulam-utayakumarai-national-security-act-a-petition-demanding-the-arrest/</link>
		<comments>http://www.a2ztamilnadu.com/tamilnews/kutankulam-utayakumarai-national-security-act-a-petition-demanding-the-arrest/#comments</comments>
		<pubDate>Mon, 06 Feb 2012 11:06:35 +0000</pubDate>
		<dc:creator>Tamil News</dc:creator>
				<category><![CDATA[சென்னை செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.a2ztamilnadu.com/?p=24218</guid>
		<description><![CDATA[தென்சென்னை மாவட்ட இளைஞர் காங்கிரஸ் முன்னாள் துணைத்தலைவர் சபீர்அலி முதலமைச்சரின் தனிப்பிரிவில் இன்று (பிப்.6) ஒரு மனு கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:- 1981-ம் ஆண்டு மத்திய அரசு நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அணுமின் திட்டத்திற்கு ஒப்பந்தம் போட்டு ரூ.13,500 கோடியில் அணுமின் நிலையம் கட்டி முடித்துள்ளது. ஆனால் அங்கு சிலரது தூண்டுதலின் பேரில் கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தலைமையில் தினமும் போராட்டம் நடத்துகிறார்கள். அங்குள்ள மக்களை குழப்புவதோடு மட்டுமல்லாமல் நாட்டுக்கு எதிராகவும் பேசுகிறார்கள். [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><a class="highslide" onclick="return vz.expand(this)" href="http://www.a2ztamilnadu.com/tamilnews/kutankulam-utayakumarai-national-security-act-a-petition-demanding-the-arrest/koodankulam1/" rel="attachment wp-att-24221"><img class="alignleft size-thumbnail wp-image-24221" title="koodankulam1" src="http://www.a2ztamilnadu.com/wp-content/uploads/2012/02/koodankulam1-150x150.jpg" alt="" width="150" height="150" /></a>தென்சென்னை மாவட்ட இளைஞர் காங்கிரஸ் முன்னாள் துணைத்தலைவர் சபீர்அலி முதலமைச்சரின் தனிப்பிரிவில் இன்று (பிப்.6) ஒரு மனு கொடுத்துள்ளார்.</p>
<p>அதில் கூறியிருப்பதாவது:-</p>
<p>1981-ம் ஆண்டு மத்திய அரசு நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அணுமின் திட்டத்திற்கு ஒப்பந்தம் போட்டு ரூ.13,500 கோடியில் அணுமின் நிலையம் கட்டி முடித்துள்ளது. ஆனால் அங்கு சிலரது தூண்டுதலின் பேரில் கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தலைமையில் தினமும் போராட்டம் நடத்துகிறார்கள்.</p>
<p>அங்குள்ள மக்களை குழப்புவதோடு மட்டுமல்லாமல் நாட்டுக்கு எதிராகவும் பேசுகிறார்கள். மத்திய அரசு அமைத்த குழுவும், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமும் கூடங்குளம் அணு உலையால் பாதிப்பு இல்லை என்று கூறியும் அதை ஏற்காமல் போராடுகிறார்கள். இதனால் மக்களுக்கு பல்வேறு இடைஞ்சல் ஏற்படுகிறது.</p>
<p>உதயகுமார் மீது 164 வழக்குகள் இருந்தும் இன்னும் அவர் கைது செய்யப்படவில்லை. இந்திய இறையாண்மைக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் அவரது நடவடிக்கை அமைந்துள்ளதால் அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.</p>
<p>இவ்வாறு அதில் கூறியுள்ளார்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.a2ztamilnadu.com/tamilnews/kutankulam-utayakumarai-national-security-act-a-petition-demanding-the-arrest/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>நில அபகரிப்பு : ஜோதிமணி மீது புகார்</title>
		<link>http://www.a2ztamilnadu.com/tamilnews/land-property-jotimani-complaint/</link>
		<comments>http://www.a2ztamilnadu.com/tamilnews/land-property-jotimani-complaint/#comments</comments>
		<pubDate>Mon, 06 Feb 2012 11:04:10 +0000</pubDate>
		<dc:creator>Tamil News</dc:creator>
				<category><![CDATA[சென்னை செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.a2ztamilnadu.com/?p=24213</guid>
		<description><![CDATA[முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள் செல்வியின் மருமகன் ஜோதிமணி மற்றும் கு க செல்வம் மற்றும் புல்லட் பாஸ்கர், ஜோதி ஆகியோர் போலி ஆவணம் தயாரித்து மதுரவாயல் அருகே 28.77 ஏக்கர் பரப்பளவு உள்ள புஞ்சை நிலத்தை அபகரிக்க முயற்சி செய்வதாக போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்யப்பட்டுள்ளது. தங்கள் குடும்பத்தினரின் உயிர் மற்றும் உடமைகளுக்கு இவர்களிடமிருந்து ஆபத்து வர வாய்ப்பு இருப்பதால் தங்களுக்கு பாதுகாப்பு அளிக்குமாறும், நிலத்தின் சொந்தக்காரர்கள் புகாரில் கூறியுள்ளனர். சென்னை பட்டாபிராம் தெற்கு  மாடவீதியில் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><a class="highslide" onclick="return vz.expand(this)" href="http://www.a2ztamilnadu.com/tamilnews/land-property-jotimani-complaint/selvi-karunanidhi/" rel="attachment wp-att-24215"><img class="alignleft size-thumbnail wp-image-24215" title="selvi-karunanidhi" src="http://www.a2ztamilnadu.com/wp-content/uploads/2012/02/selvi-karunanidhi-150x150.jpg" alt="" width="150" height="150" /></a>முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள் செல்வியின் மருமகன் ஜோதிமணி மற்றும் கு க செல்வம் மற்றும் புல்லட் பாஸ்கர், ஜோதி ஆகியோர் போலி ஆவணம் தயாரித்து மதுரவாயல் அருகே 28.77 ஏக்கர் பரப்பளவு உள்ள புஞ்சை நிலத்தை அபகரிக்க முயற்சி செய்வதாக போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்யப்பட்டுள்ளது.</p>
<p>தங்கள் குடும்பத்தினரின் உயிர் மற்றும் உடமைகளுக்கு இவர்களிடமிருந்து ஆபத்து வர வாய்ப்பு இருப்பதால் தங்களுக்கு பாதுகாப்பு அளிக்குமாறும், நிலத்தின் சொந்தக்காரர்கள் புகாரில் கூறியுள்ளனர். சென்னை பட்டாபிராம் தெற்கு  மாடவீதியில் வசிக்கும் எம்.ஆர்.ரமணன் என்பவர் சென்னை மாநகர காவல் துறை ஆணையரிடம் புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.</p>
<p>தனது தாய்வழி முப்பாட்டனாரின் தந்தை மறைந்த கே.சண்முக  சுந்தர முதலியாருக்கு மதுரவாயல் கிராமத்தில் 28.77 ஏக்கர் பரப்பளவு உள்ள புஞ்சை நிலம் சொந்தமாக இருந்தது.  1875 ஆம் ஆண்டு செட்டில்மெண்ட் அலுவலகத்தில் அதன் இயக்குனரால் பட்டா வழங்கப்பட்டுள்ளது. அதற்கான சுற்றறிக்கையை இத்துடன் இணைத்திருக்கிறேன்.</p>
<p>இந்த நிலத்தை சண்முக சுந்தர முதலியாரோ அல்லது அவரது வாரிசுகளோ இதுவரை யாருக்கும் விற்பனை செய்யவில்லை.</p>
<p>இந்த சூழ்நிலையில் ஜோதிமணி (முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மகள் செல்வியின் மருமகன்எழிலரசியின் கணவர்), கு.க.செல்வம், புல்லட் பாஸ்கர் மற்றும் ஜோதி ஆகிய நால்வரும் கூட்டு சதி செய்து இந்த நிலத்தை அவர்கள் வாங்கியது போல போலி ஆவணங்களை தயார் செய்து இந்த நிலத்தை அபகரிக்க முயற்சி செய்கிறார்கள்.</p>
<p>ஆகவே எங்களுக்கு சொந்தமான இந்த நிலத்தை அபகரிக்க முயற்சி செய்யும் ஜோதிமணி, கு.க.செல்வம், புல்லட் பாஸ்கர், ஜோதி ஆகிய நால்வரையும் விசாரித்து அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.</p>
<p>மேலும் இந்த நான்கு பேரிடமிருந்து எங்கள் குடும்பத்தாரின் உயிர் மற்றும் உடமைகளுக்கு ஆபத்து வர வாய்ப்பு இருப்பதால் எங்களுக்கு தக்க பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு எம்.ஆர்.ரமணன் அந்த மனுவில் கூறியிருக்கிறார்.</p>
<p>போலீசார் அந்த மனு குறித்து ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.a2ztamilnadu.com/tamilnews/land-property-jotimani-complaint/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு: முதல்வர் உத்தரவு</title>
		<link>http://www.a2ztamilnadu.com/tamilnews/open-water-from-vaigai-dam-chief-minister-orders/</link>
		<comments>http://www.a2ztamilnadu.com/tamilnews/open-water-from-vaigai-dam-chief-minister-orders/#comments</comments>
		<pubDate>Mon, 06 Feb 2012 10:22:25 +0000</pubDate>
		<dc:creator>Tamil News</dc:creator>
				<category><![CDATA[சென்னை செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.a2ztamilnadu.com/?p=24208</guid>
		<description><![CDATA[மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வைகை அணையிலிருந்து நாளை முதல் தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிருப்பதாவது: தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணையிலிருந்து மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள வைகை பூர்வீக பாசனப் பகுதிகளுக்கு சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள பூர்வீக [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><a class="highslide" onclick="return vz.expand(this)" href="http://www.a2ztamilnadu.com/tamilnews/open-water-from-vaigai-dam-chief-minister-orders/jeyalalitha-5/" rel="attachment wp-att-24210"><img class="alignleft size-thumbnail wp-image-24210" title="jeyalalitha" src="http://www.a2ztamilnadu.com/wp-content/uploads/2012/02/jeyalalitha-150x150.jpg" alt="" width="150" height="150" /></a>மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வைகை அணையிலிருந்து நாளை முதல் தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.</p>
<p>இது குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிருப்பதாவது: தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணையிலிருந்து மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள வைகை பூர்வீக பாசனப் பகுதிகளுக்கு சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள பூர்வீக பாசனப் பகுதிகளுக்கு பாசனத்திற்காக வைகை அணையிலிருந்து 7.2.2012 முதல் தண்ணீர் திறந்து விட நான் ஆணையிட்டுள்ளேன்.</p>
<p>இதனால் மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள 1,36,109 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.</p>
<p>இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.a2ztamilnadu.com/tamilnews/open-water-from-vaigai-dam-chief-minister-orders/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>தனிக்கோர்ட் முடிவு தவறு; உச்சநீதிமன்றத்தில் நிரூபிப்பேன் &#8211; சாமி</title>
		<link>http://www.a2ztamilnadu.com/tamilnews/mistake-by-a-court-and-prove-in-court-sami/</link>
		<comments>http://www.a2ztamilnadu.com/tamilnews/mistake-by-a-court-and-prove-in-court-sami/#comments</comments>
		<pubDate>Mon, 06 Feb 2012 09:54:39 +0000</pubDate>
		<dc:creator>Tamil News</dc:creator>
				<category><![CDATA[இந்தியா]]></category>

		<guid isPermaLink="false">http://www.a2ztamilnadu.com/?p=24202</guid>
		<description><![CDATA[ப.சிதம்பரத்துக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்த சிபிஐ நீதிமன்றத்தின் முடிவு தவறு என்று உச்சநீதிமன்றத்தில் நிரூபிப்பேன் என்று சுப்பிரமணிய சாமி கூறினார். &#8217;2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலும், அதன் தாக்கமும்&#8217; என்ற தலைப்பில் மும்பையில் நடைபெற்ற கருத்தரங்கில் ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி பங்கேற்று பேசினார். அவர் பேசியதாவது: 2ஜி ஸ்பெக்ட்ரம் லைசென்சுகளுக்கு விலையை நிர்ணயிக்க மத்திய நிதி அமைச்சகத்துக்கும், மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகத்துக்கும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மன்மோகன்சிங் ஒருமுறை கூறினார். அதன் பிறகுதான், அப்போதைய [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><a class="highslide" onclick="return vz.expand(this)" href="http://www.a2ztamilnadu.com/tamilnews/mistake-by-a-court-and-prove-in-court-sami/supreme-court1-2/" rel="attachment wp-att-24205"><img class="alignleft size-thumbnail wp-image-24205" title="supreme-court1" src="http://www.a2ztamilnadu.com/wp-content/uploads/2012/02/supreme-court1-150x150.jpg" alt="" width="150" height="150" /></a>ப.சிதம்பரத்துக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்த சிபிஐ நீதிமன்றத்தின் முடிவு தவறு என்று உச்சநீதிமன்றத்தில் நிரூபிப்பேன் என்று சுப்பிரமணிய சாமி கூறினார்.</p>
<p>&#8217;2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலும், அதன் தாக்கமும்&#8217; என்ற தலைப்பில் மும்பையில் நடைபெற்ற கருத்தரங்கில் ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி பங்கேற்று பேசினார். அவர் பேசியதாவது:</p>
<p>2ஜி ஸ்பெக்ட்ரம் லைசென்சுகளுக்கு விலையை நிர்ணயிக்க மத்திய நிதி அமைச்சகத்துக்கும், மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகத்துக்கும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மன்மோகன்சிங் ஒருமுறை கூறினார். அதன் பிறகுதான், அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு எதிரான ஆதாரங்களை சேகரிக்க தொடங்கினேன். கடந்த 2001ம் ஆண்டு, நாட்டில் 40 லட்சம் செல்போன்கள்தான் இருந்தன.</p>
<p>ஆனால், 2008ம் ஆண்டு இந்த எண்ணிக்கை 70 கோடியாக உயர்ந்து விட்டது. சந்தை பெரிதாக ஆகிவிட்டது. அப்படி இருக்கும்போது, 2001ம் ஆண்டின் விலைக்கு 2008ம் ஆண்டில் ஸ்பெக்ட்ரமை விற்றது தவறு. மேலெழுந்தவாரியாக பார்க்கும் போதே, ப.சிதம்பரம் மீதான எனது வழக்கு சரியானதுதான் என்று தெரிய வரும்.</p>
<p>2001ம் ஆண்டு விலைக்கு ஸ்பெக்ட்ரம் லைசென்சை விற்க சம்மதித்தது ஏன்? என்றும், லைசென்சு பெற்ற நிறுவனங்கள், தங்கள் பங்குகளை விற்க சம்மதித்தது ஏன்? என்றும் ப.சிதம்பரத்திடம் குறுக்கு விசாரணை நடத்த அவருக்கு கோர்ட்டு சம்மன் அனுப்ப வேண்டும் என்று எதிர்பார்த்தேன்.</p>
<p>ஆ.ராசாவை, விசாரணைக்கு உட்படுத்தும்போது, ப.சிதம்பரத்தையும் ஏன் விசாரிக்கக் கூடாது? குற்ற நிரூபண நடவடிக்கைகளை, சாட்சிகள் விசாரணை சமயத்தில் கொண்டுவர முடியாது. எனவே, எனது மனுவை நிராகரித்தது தவறு. இதை உச்சநீதிமன்றத்தில் நான் நிரூபிப்பேன். இதற்காக விரைவில் அப்பீல்மனு தாக்கல் செய்வேன்.</p>
<p>பாபா ராம்தேவ், அன்னா ஹசாரே ஆகியோருடன் நான் இணைவது அவசியம். ராம்தேவுடன் நேற்று பெரிய கூட்டத்தில் பேசினேன். அன்னா ஹசாரே குழுவினர், அரசியல்வாதிகள் மீதான வெறுப்பை கைவிட வேண்டும். ஏனென்றால், ஜனநாயகத்தில் அரசியல்வாதிகளும், அரசியல் கட்சிகளும் இல்லாமல் எதுவும் செய்ய முடியாது. இவ்வாறு சுப்பிரமணிய சாமி கூறினார்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.a2ztamilnadu.com/tamilnews/mistake-by-a-court-and-prove-in-court-sami/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>பேஸ்புக்கில் இணைந்தார் அப்துல்கலாம்</title>
		<link>http://www.a2ztamilnadu.com/tamilnews/abdulkalam-joined-facebook/</link>
		<comments>http://www.a2ztamilnadu.com/tamilnews/abdulkalam-joined-facebook/#comments</comments>
		<pubDate>Mon, 06 Feb 2012 09:32:52 +0000</pubDate>
		<dc:creator>Tamil News</dc:creator>
				<category><![CDATA[இந்தியா]]></category>

		<guid isPermaLink="false">http://www.a2ztamilnadu.com/?p=24194</guid>
		<description><![CDATA[முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ பி ஜே அப்துல்கலாம் பெயரில் பத்துக்கும் மேற்பட்ட பேஸ்புக் கணக்குகள் பலரால் தொடங்கப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 4ஆம் தேதி தான் அப்துல்கலாம் அதிகாரப்பூர்வமாக பேஸ்புக்கில் இணைந்தார். நாட்டின் வளர்ச்சிக்கான தனது திட்டங்களை பேஸ்புக் மூலம் இளைஞர்களுடன் பகிர்ந்து கொள்ள இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். பேஸ்புக் இணைய தளத்தில் தினமும் பல்வேறு தகவல்களை அளிக்க இருக்கிறேன். நாட்டின் முன்னேற்றம் குறித்த சிறந்த லட்சியங்கள் உடைய இளைஞர்களுடன் எப்போதும் தொடர்பில் இருக்க பேஸ்புக் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><a class="highslide" onclick="return vz.expand(this)" href="http://www.a2ztamilnadu.com/tamilnews/abdulkalam-joined-facebook/abdulkalam-2/" rel="attachment wp-att-24196"><img class="alignleft size-thumbnail wp-image-24196" title="abdulkalam" src="http://www.a2ztamilnadu.com/wp-content/uploads/2012/02/abdulkalam-150x150.jpg" alt="" width="150" height="150" /></a>முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ பி ஜே அப்துல்கலாம் பெயரில் பத்துக்கும் மேற்பட்ட பேஸ்புக் கணக்குகள் பலரால் தொடங்கப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 4ஆம் தேதி தான் அப்துல்கலாம் அதிகாரப்பூர்வமாக பேஸ்புக்கில் இணைந்தார்.</p>
<p>நாட்டின் வளர்ச்சிக்கான தனது திட்டங்களை பேஸ்புக் மூலம் இளைஞர்களுடன் பகிர்ந்து கொள்ள இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். பேஸ்புக் இணைய தளத்தில் தினமும் பல்வேறு தகவல்களை அளிக்க இருக்கிறேன்.</p>
<p>நாட்டின் முன்னேற்றம் குறித்த சிறந்த லட்சியங்கள் உடைய இளைஞர்களுடன் எப்போதும் தொடர்பில் இருக்க பேஸ்புக் நல்ல கருவியாக இருக்கும் என்றார். அப்துல்கலாமின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் முகவரி: www.facebook.com/officialkalam</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.a2ztamilnadu.com/tamilnews/abdulkalam-joined-facebook/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நள்ளிரவு மயான பூஜை</title>
		<link>http://www.a2ztamilnadu.com/tamilnews/macaniyamman-anaimalai-midnight-graveyard-rituals-in-the-temple/</link>
		<comments>http://www.a2ztamilnadu.com/tamilnews/macaniyamman-anaimalai-midnight-graveyard-rituals-in-the-temple/#comments</comments>
		<pubDate>Mon, 06 Feb 2012 09:29:23 +0000</pubDate>
		<dc:creator>Tamil News</dc:creator>
				<category><![CDATA[தமிழக செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.a2ztamilnadu.com/?p=24189</guid>
		<description><![CDATA[ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நள்ளிரவு நடைபெற்ற மயான பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். தமிழகத்தின் பிரசித்தி பெற்ற வேண்டுதல் தலங்களில் ஆனைமலை மாசாணியம்மன் கோவிலும் ஒன்றாகும். இங்கு குண்டம் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசை அன்று தொடங்கும். இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழா கடந்த 23ஆம் தேதி தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியான மயானபூஜை நேற்று நள்ளிரவு ஆழியாறு ஆற்றங்கரையில் உள்ள மயான எரிமேடையில் நடந்தது. இதற்காக மயான மேடையில் முறைதாரர்கள் அம்மனின் உருவாரத்தை [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><a class="highslide" onclick="return vz.expand(this)" href="http://www.a2ztamilnadu.com/tamilnews/macaniyamman-anaimalai-midnight-graveyard-rituals-in-the-temple/people-in-temple/" rel="attachment wp-att-24191"><img class="alignleft size-thumbnail wp-image-24191" title="people in temple" src="http://www.a2ztamilnadu.com/wp-content/uploads/2012/02/people-in-temple-150x150.jpg" alt="" width="150" height="150" /></a>ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நள்ளிரவு நடைபெற்ற மயான பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.</p>
<p>தமிழகத்தின் பிரசித்தி பெற்ற வேண்டுதல் தலங்களில் ஆனைமலை மாசாணியம்மன் கோவிலும் ஒன்றாகும். இங்கு குண்டம் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசை அன்று தொடங்கும். இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழா கடந்த 23ஆம் தேதி தொடங்கியது.</p>
<p>விழாவின் சிகர நிகழ்ச்சியான மயானபூஜை நேற்று நள்ளிரவு ஆழியாறு ஆற்றங்கரையில் உள்ள மயான எரிமேடையில் நடந்தது. இதற்காக மயான மேடையில் முறைதாரர்கள் அம்மனின் உருவாரத்தை அமைத்திருந்தனர். மயான பூஜையையொட்டி நள்ளிரவு 1 மணிக்கு மாசாணியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.</p>
<p>அதைத்தொடர்ந்து முறைதாரர் ஏ.பி.மனோகரன் தலைமையில் அம்மன் அருளாளிகள் அருண், குப்புசாமி, மற்றும் நூற்றுக்கணக்கான முறைதாரர்கள் மயான எரி மேடைக்கு வந்தனர். அங்கு அம்மன் உருவாரத்துக்கு சிறப்பு பூஜை செய்தனர்.</p>
<p>அதன் தொடர்ச்சியாக அதிகாலை 2-30 மணிக்கு பம்பை மேளம் முழங்க அம்மன் அருளாளி அருண் அருள் வந்து ஆடி உருவாரத்தை சிதைத்தார். அதிலிருந்த எலும்புகளை வாயில் கவ்வியபடி ஆக்ரோஷமாக ஆடினார். பின்னர் பட்டுச் சேலையில் பிடிமண் எடுத்துக் கொண்டு உப்பாற்றங்கரை வந்தனர். நள்ளிரவு நடைபெற்ற மயான பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். அங்கு இன்று காலை 7 மணி அளவில் கும்பஸ்தாபனமும் அதைத்தொடர்ந்து குண்டம் இறங்கும் பக்தர்களுக்கு கங்கணம் கட்டும் நிகழ்ச்சியும் நடந்தது. இன்று மாலை மகா பூஜை நடக்கிறது.</p>
<p>நாளை காலை 10 மணிக்கு குண்டம் கட்டுதலும், மாலை 6 மணிக்கு சித்திரை தேர் வடம் பிடித்தலும், அம்மன் வீதி உலாவும் நடைபெறுகிறது. நாளை நள்ளிரவு 10 மணிக்கு குண்டம் பூ வளர்க்கப்படும். 8-ந் தேதி காலை பக்தர்கள் குண்டம் இறங்குவார்கள்.</p>
<p>குண்டம் இறங்கினால் நினைத்தது நிறைவேறும் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது.   மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உமா, துணை சூப்பிரண்டு பழனிசாமி தலைமையில் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் தலைமையில் 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.a2ztamilnadu.com/tamilnews/macaniyamman-anaimalai-midnight-graveyard-rituals-in-the-temple/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>கடும் பனிப்பொழிவு: இங்கிலாந்தில் விமானங்கள் ரத்து</title>
		<link>http://www.a2ztamilnadu.com/tamilnews/heavy-snowfall-flights-canceled-in-england/</link>
		<comments>http://www.a2ztamilnadu.com/tamilnews/heavy-snowfall-flights-canceled-in-england/#comments</comments>
		<pubDate>Mon, 06 Feb 2012 09:26:51 +0000</pubDate>
		<dc:creator>Tamil News</dc:creator>
				<category><![CDATA[சர்வதேசம்]]></category>

		<guid isPermaLink="false">http://www.a2ztamilnadu.com/?p=24183</guid>
		<description><![CDATA[இந்த ஆண்டு ஐரோப்பா கண்டத்தில் உள்ள நாடுகளில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. தட்ப வெப்ப நிலை மைனஸ் 30 டிகிரி ஆக குறைந்துள்ளது. இதனால் சாலைகளிலும், வீட்டின் கூரைகளிலும் பனி கொட்டிக்கிடக்கிறது. இங்கிலாந்து, இத்தாலி, உக்ரைன், சுவிட்சர்லாந்து, ஸ்பெயின் போன்ற நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. உக்ரைனில் மட்டும் கடும் குளிருக்கு 100 பேர் பலியாகி உள்ளனர். ஐரோப்பா கண்டம் முழுவதும் இதுவரை 500 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த 2 நாட்களாக இங்கிலாந்தில் கடும் பனி [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><a class="highslide" onclick="return vz.expand(this)" href="http://www.a2ztamilnadu.com/tamilnews/heavy-snowfall-flights-canceled-in-england/heavy-snowfall-airoplane/" rel="attachment wp-att-24186"><img class="alignleft size-thumbnail wp-image-24186" title="heavy snowfall airoplane" src="http://www.a2ztamilnadu.com/wp-content/uploads/2012/02/heavy-snowfall-airoplane-150x150.jpg" alt="" width="150" height="150" /></a>இந்த ஆண்டு ஐரோப்பா கண்டத்தில் உள்ள நாடுகளில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. தட்ப வெப்ப நிலை மைனஸ் 30 டிகிரி ஆக குறைந்துள்ளது. இதனால் சாலைகளிலும், வீட்டின் கூரைகளிலும் பனி கொட்டிக்கிடக்கிறது. இங்கிலாந்து, இத்தாலி, உக்ரைன், சுவிட்சர்லாந்து, ஸ்பெயின் போன்ற நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.</p>
<p>உக்ரைனில் மட்டும் கடும் குளிருக்கு 100 பேர் பலியாகி உள்ளனர். ஐரோப்பா கண்டம் முழுவதும் இதுவரை 500 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த 2 நாட்களாக இங்கிலாந்தில் கடும் பனி கொட்டுகிறது. இதனால் ரோடுகளில் 16 செ.மீட்டர் உயரத்துக்கு பனி படர்ந்து மூடிக்கிடக்கிறது.</p>
<p>தொடர்ந்து பனி மழை பொழிகிறது. இதனால் அங்கு மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் பனி மூடிக்கிடப்பதால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. அதனால் தெற்கு ஸ்காட்லாந்து, வேல்ஸ் தென்கிழக்கு, இங்கிலாந்து பகுதிகளுக்கு செல்ல முடியாமல் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. கார்களை இயக்க முடியாமல், சாலைகளில் ஆங்காங்கே நிறுத்தி வைத்துள்ளனர்.</p>
<p>இதனால் காருக்குள்ளேயே இரவு பொழுதை கழிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடும் பனிப்பொழிவு காரணமாக இங்கிலாந்தில் ஹீத் ரோவில் இருந்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு புறப்படும் 1200 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு செல்லக்கூடிய விமானங்கள் செல்ல முடியவில்லை. இதன் மூலம் இங்கிலாந்து மற்ற ஐரோப்பிய நாடுகளில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.a2ztamilnadu.com/tamilnews/heavy-snowfall-flights-canceled-in-england/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
	</channel>
</rss>

