தமிழ் செய்திகள் » வர்த்தகம் “வர்த்தகம்”

ரூ. 5 லட்சமாக உயருகிறது வருமான வரி உச்சவரம்பு

ரூ. 5 லட்சமாக உயருகிறது வருமான வரி உச்சவரம்பு

        புதுடெல்லி, பிப்.21, ஆண்டிற்கு ரூ. 5 லட்சம் வரை சம்பளம் வாங்கும் ஊழியர்கள்  இனிமேல் வருமான வரி செலுத்த தேவையில்லை என மத்திய நிதியமைச்சகம் கூறியுள்ளது. இச்சலுகையினால் ஏறத்தாழ 85 லட்சம் பணியாளர்கள் பயனடைவார்கள். வரும் நிதியாண்டு முதல் இச்சலுகை அமலாக உள்ளது. இச்சலுகையை பெற ஊழியர்கள், அவர்கள் பணிபுரியும் நிறுவனத்திடமிருந்து வருமானத்திற்கான சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும். மேலும் ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் வரை வருமானம் பெறுபவர்கள் இனி வருமான வரி கணக்கை [...]

February 21 2012 | பதிவுகள் வர்த்தகம் | செய்தி தொடர்ச்சி »

சென்னையில் தேசிய கைத்தறி கண்காட்சி 2012 துவக்கம்

சென்னையில் தேசிய கைத்தறி கண்காட்சி 2012 துவக்கம்

தேசிய கைத்தறி கண்காட்சி 2012 சென்னை எழும்பூரில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் கைத்தறி கண்காட்சி திடலில் 10.2.2012 அன்று துவக்கப்பட்டு மார்ச் 5 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கண்காட்சி வாடிக்கையாளர்கள் பெருமளவில் வந்து கைத்தறி இரகங்களை வாங்கி செல்வதாலும், பொது மக்களின் ஏகோபித்த வேண்டுதலுக்கு இணங்க மாலை 2.00 மணிக்கு பதிலாக இனிமேல் காலை 11.00 மணி முதல இரவு 9.00 மணி வரை நடைபெறும். கண்காட்சிக்கு நுழைவு கட்டணம் ஏதும் கிடையாது. விற்பனையாகும் [...]

February 18 2012 | பதிவுகள் சென்னை செய்திகள், வர்த்தகம் | செய்தி தொடர்ச்சி »

ரயில் பயணிகளுக்கு புதிய வரி?

ரயில் பயணிகளுக்கு புதிய வரி?

ரயில் பயணிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிப்பது குறித்து ஆய்வு செய்த ரயில்வே பாதுகாப்பு கமிட்டி தனது அறிக்கையை, ரயில்வே துறை அமைச்சர் தினேஷ் திரிவேதியிடம் தாக்கல் செய்து இருக்கிறது. அதில், தற்போது ரயில்வே துறை இருக்கும் நிலையில், அதை காப்பாற்ற ஒரு லட்சம் கோடி ரூபாய் தேவையாக இருக்கிறது. இந்த நிதியை சேர்க்க ரயில் பயணிகளுக்கு புதிய வரி விதிக்கலாம். இதன் மூலம் ரயில்வே துறைக்கு ஏற்படும் கூடுதல் செலவை சமாளிக்க முடியும். மேலும், புதிய ரயில்களையும் [...]

February 18 2012 | பதிவுகள் இந்தியா, வர்த்தகம் | செய்தி தொடர்ச்சி »

பங்குச்சந்தை: ஏற்றத்துடன் துவக்கம்

பங்குச்சந்தை: ஏற்றத்துடன் துவக்கம்

இந்திய பங்குச்சந்தைகள் இன்று (பிப்.17) ஏற்றத்துடன் தொடங்கின. நேற்று 48.42 புள்ளிகளை இழந்து முடிந்த மும்பை பங்குச்சந்தை இன்று வர்த்தகம் தொடங்கியவுடன் 192.20 புள்ளிகள் ஏற்றம் கண்டு 18,346.19 என இருந்தது. வங்கித்துறை, எண்ணெய், கேஸ் மறறும் உலோகப் பொருட்களின் பங்குகள் ஏற்றம் கண்டன. இதேபோல் நிப்டியும் 53.65 புள்ளிகள் உயர்ந்து 5.574.60 ஆக இருந்தது.

February 17 2012 | பதிவுகள் வர்த்தகம் | செய்தி தொடர்ச்சி »

ஏலத்தின் மூலமே தொலைத் தொடர்புத்துறை உரிமங்கள்: கபில் சிபில்

ஏலத்தின் மூலமே தொலைத் தொடர்புத்துறை உரிமங்கள்: கபில் சிபில்

வரும் காலங்களில் வழங்கப்படும் தொலைத்தொடர்புத்துறை உரிமைங்கள் அனைத்தும் ஏலத்தின் மூலமே வழங்கப்படும் எனவும், அவற்றிற்கும் 2ஜி அலைக்கற்றை ஏலத்திற்கும் எவ்வித தொடர்பும் இருக்காது எனவும் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் கபில் சிபில் தெரிவித்துள்ளார். மேலும் ஸ்பெக்ட்ரம் பங்கீடுகள் அனைத்தும் 8 சதவீத கட்டண அடிப்படையில் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஒவ்வெதரு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை உரிமம் புதுப்பிக்கட வேண்டும் எனவும், 2ஜி வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் அடிப்படையில் உரிமங்கள் சரிபார்க்கப்படும் எனவும், [...]

February 15 2012 | பதிவுகள் வர்த்தகம் | செய்தி தொடர்ச்சி »

கோவையிலிருந்து மும்பைக்கு விமானம்: இண்டிகோ விமான நிறுவனம்

கோவையிலிருந்து மும்பைக்கு விமானம்: இண்டிகோ விமான நிறுவனம்

மீண்டும் தென்னிந்தியாவில் இண்டிகோ விமான நிறுவனம் தடம் பதிக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக கோவையில் இருந்து மும்பை வரை விமானம் இயக்க முடிவு செய்துள்ளது. கோவையிலிருந்து மும்பைக்கு நேரடி விமான போக்குவரத்தை இண்டிகோ நிறுவனம் நாளை (பிப்.16) துவக்குகிறது. இதன் ஆரம்ப கட்டணம் ரூ.3735 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கோவையில் பகல் 2.05க்கு புறப்படும் விமானம் பகல் 3.50 க்கு மும்பையை அடைகிறது. இதே போன்று மும்பையில் இருந்து காலை 11.50க்கு புறப்படும் விமானம் பகல் 1.35 மணிக்கு கோவையை [...]

February 15 2012 | பதிவுகள் வர்த்தகம் | செய்தி தொடர்ச்சி »

பழநி தைப்பூச விழா : ரூ. 4 கோடி வசூல்

பழநி தைப்பூச விழா : ரூ. 4 கோடி வசூல்

பழநி தைப்பூச விழாவை முன்னிட்டு, கோயில் வசூல் நான்கு கோடி ரூபாயை எட்டியது. தைப்பூச விழா 10 நாட்கள் நடந்தன. இந்த நாட்களில் கோயிலில், பஞ்சாமிர்த விற்பனை- ஒரு கோடி 50 லட்சத்து 81 ஆயிரத்து 575. தரிசன டிக்கெட்- ஒரு கோடி 27 லட்சத்து ஒன்பது ஆயிரத்து 800. தங்க ரத புறப்பாடு காணிக்கை- ஒன்பது லட்சத்து 96 ஆயிரம். ரோப் கார்- 14 லட்சம். வின்ச்- 12 லட்சம்.அபிஷேகம், அர்ச்சனை, தங்கும் விடுதி, முடிக்காணிக்கை [...]

February 15 2012 | பதிவுகள் தமிழக செய்திகள், வர்த்தகம் | செய்தி தொடர்ச்சி »

பங்கு வர்த்தகம் : 18,000 புள்ளிகளை கடந்தது சென்செக்ஸ்

பங்கு வர்த்தகம் : 18,000 புள்ளிகளை கடந்தது சென்செக்ஸ்

சில்லரை வணிகத்தில் எதிர்பார்த்ததை விட அதிக அளவிலான காலாண்டு வருமானத்தை நிறுவனங்கள் பெற்றதன் காரணமாக இந்திய பங்குச் சந்தைகள் இன்று (பிப்.15) 209 புள்ளிகள் ஏற்றத்துடன் துவங்கி உள்ளன. இதனால் சென்செக்ஸ் மீண்டும் 18 ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் உயர்ந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது சென்செக்ஸ் 208.76 புள்ளிகள் உயர்ந்து 18,057.33 புள்ளிகளாகவும், நிஃப்டி 60.25 புள்ளிகள் உயர்ந்து 5476.30 புள்ளிகளாகவும் உள்ளன.

February 15 2012 | பதிவுகள் வர்த்தகம் | செய்தி தொடர்ச்சி »

தங்கம் விலை சற்று உயர்வு

தங்கம் விலை சற்று உயர்வு

தங்கம், வெள்ளி விலையில் இன்று (பிப்.15) சிறிதளவு ஏற்றம் காணப்படுகிறது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.88ம், பார் வெள்ளி ரூ.145ம் அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின் விலை ரூ.2621 ஆகவும், 24 காரட் தங்கத்தின் விலை ரூ.28,035 ஆகவும் உள்ளது. ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.61.40 க்கும், பார் வெள்ளி விலை ரூ.57,395க்கும் விற்பனையாகிறது.

February 15 2012 | பதிவுகள் சென்னை செய்திகள், வர்த்தகம் | செய்தி தொடர்ச்சி »

மார்ச் 25 முதல் மும்பை விமான சேவை நிறுத்தம் – ஆஸ்திரியா ஏர்லைன்ஸ்

மார்ச் 25 முதல் மும்பை விமான சேவை நிறுத்தம் – ஆஸ்திரியா ஏர்லைன்ஸ்

பொருளாதார சூழ்நிலை காரணமாக, மும்பை -வியன்னா விமான சேவையை, மார்ச் 25ம் தேதி முதல் நிறுத்த உள்ளதாக ஆஸ்திரியா ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆஸ்திரியன் ஏர்லைன்ஸ் நிறுவனம், ஏர் ஏசியா எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, இந்தியாவின் பல நகரங்களில் விமானச் சேவையை அளித்து வருகிறது. பொருளாதார ஸ்திரத்தன்மையற்ற நிலை, போதிய வாடிக்கையாளர் இன்மை உள்ளிட்ட காரணங்களால், வரும் மார்ச் மாதம் 25ம் தேதி முதல், மும்பை – வியன்னா விமான சேவை நிறுத்தப்பட உள்ளதாகவும், வாரத்திற்கு 6 [...]

February 14 2012 | பதிவுகள் வர்த்தகம் | செய்தி தொடர்ச்சி »