தமிழ் செய்திகள் » இந்தியா “இந்தியா”

தில்லியில் பாகிஸ்தான் உளவாளி கைது

தில்லியில் பாகிஸ்தான் உளவாளி கைது

தலைநகர் தில்லியில் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயைச் சேர்ந்தவர் என சந்தேகிக்கப்படும் ஒருவர் பாதுகாப்புத்துறை ஆவணங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கொல்கத்தாவைச் சேர்ந்த கம்ரான் அக்பர் என்பவர் பிப்ரவரி 13-ம் தேதி புதுதில்லி ரயில் நிலையம் அருகே ரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார் என்று உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கைது செய்யப்பட்டபோது பாதுகாப்புத்துறை தொடர்பான சில ஆவணங்களை அவர் வைத்திருந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அக்பர் கராச்சியைச் சேர்ந்தவர். இந்தியப் பெண் ஒருவரை அவர் திருமணம் [...]

February 21 2012 | பதிவுகள் இந்தியா | செய்தி தொடர்ச்சி »

பிறந்தநாள் பரிசு வழக்கு : ஜெயலலிதாவிற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

பிறந்தநாள் பரிசு வழக்கு : ஜெயலலிதாவிற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

பிறந்தநாள் பரிசு வழக்கு தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இவ்வழக்கு தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பு வழங்கியிருந்தது. அத்தீர்ப்பை எதிர்த்து மத்திய புலனாய்வு துறை (சி.பி.ஐ.) உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்ததையடுத்து, ஜெயலலிதாவிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஜெயலலிதா உள்ளிட்ட 3 பேர், இதுகுறித்து 4 வாரங்களுக்குள் விளக்கம் அளிக்கவேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

February 21 2012 | பதிவுகள் இந்தியா | செய்தி தொடர்ச்சி »

முல்லைப்பெரியாறில் புதிய அணை கட்ட மத்திய அரசு அனுமதி இல்லை: கேரள அரசு கோரிக்கை நிராகரிப்பு

முல்லைப்பெரியாறில் புதிய அணை கட்ட மத்திய அரசு அனுமதி இல்லை: கேரள அரசு கோரிக்கை நிராகரிப்பு

தேனி மாவட்டத்தில் தமிழக-கேரள எல்லையில் உள்ள முல்லைப் பெரியாறு அணை மூலம் தமிழகத்தின் 5 மாவட்டங்கள் பாசன வசதி பெறுவதுடன் குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது. அணை கேரளாவில் இருந்தாலும் 999 ஆண்டு ஒப்பந்தப்படி தமிழகம் அணையின் பராமரிப்பு நிர்வாகத்தை கவனித்து வருகிறது. தண்ணீரைப் பயன்படுத்துவதற்கான ராயல்டி தொகையும் தமிழக அரசு செலுத்தி வருகிறது. முல்லைப் பெரியாறு அணையின் கீழே இடுக்கியில் பிரமாண்ட அணையை கேரளா கட்டி அதன் மூலம் மின்சாரம் தயாரித்து வருகிறது. இதற்கு போதுமான நீர் [...]

February 21 2012 | பதிவுகள் இந்தியா | செய்தி தொடர்ச்சி »

உ.பி.,ல் பா.ஜனதா வெற்றி பெறும் – உமா பாரதி

உ.பி.,ல் பா.ஜனதா வெற்றி பெறும் – உமா பாரதி

உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தனது கட்சி போதுமான இடங்களில் வெற்றி பெற்று  ஆட்சி அமைக்கும் என்று பா.ஜ.கட்சியின் தலைவர்களில் ஒருவரான உமா பாரதி நம்பிக்கை தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்- உத்தரபிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் ராகுல் காந்தி மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு மக்களின் போதுமான ஆதரவு இல்லை. அக்கட்சி அந்த மாநிலத்தில் தன்னுடைய அரசியல் விளையாட்டை நடத்துகிறது. லக்னோவில் விரைவில் ஆட்சி அமைப்பதற்கு பா.ஜனதா அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெறும். [...]

February 20 2012 | பதிவுகள் இந்தியா | செய்தி தொடர்ச்சி »

ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு- தேர்தல் கமிஷன் நடவடிக்கை

ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு- தேர்தல் கமிஷன் நடவடிக்கை

உத்தர பிரதேச மாநிலம், கான்பூரில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி நேற்று (பிப்.20) ஊர்வலமாக சென்று தேர்தல் பிரசாரம் செய்தார். சிவராத்திரி விழாவையட்டி போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமல் தடுப்பதற்காக, நேற்று மத்தியானத்திற்குள் 20 கிலோ மீட்டர் தூரம் வரைதான் ஊர்வலமாக செல்ல ராகுலுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால், காலை 10.30 மணிக்கு தொடங்கிய ராகுல் பங்கேற்ற ஊரவலம் பிற்பகல் 3 மணி வரை 38 கிலோ மீட்டர் தூரம் வரை நீடித்தது. இது முழுமையான [...]

February 20 2012 | பதிவுகள் இந்தியா | செய்தி தொடர்ச்சி »

தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்: அஜீத் சிங் மகனுக்குதேர்தல் தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்: அஜீத் சிங் மகனுக்குதேர்தல் தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் அஜீத் சிங்கின் மகன் ஜெயந்த் செளத்ரி, தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக, தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ராஷ்ட்ரிய லோகதளம் கட்சித் தலைவர்களில் ஒருவராக உள்ள ஜெயந்த் செளத்ரி, உத்தரப் பிரதேச தேர்தல் பிரசாரத்தின்போது உள்ளூர் தலைவரிடமிருந்து பணம் பெற்றுள்ளார். இது கேமராவில் பதிவாகியுள்ளது. இது தொடர்பாக ஜெயந்த் செளத்ரிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணைய அதிகாரி ராம் அவதார் ராமன் தெரிவித்தார்.  தங்களுக்குக் கிடைத்துள்ள கேமரா ஆதாரத்தில், கோவர்தன் [...]

February 20 2012 | பதிவுகள் இந்தியா | செய்தி தொடர்ச்சி »

மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் : இத்தாலி எச்சரிக்கை

மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் : இத்தாலி எச்சரிக்கை

இரு இந்திய மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்தியாவுடன் ‘குறிப்பிடத்தக்க சட்ட ரீதியான வேறுபாடுகள்’ இருப்பதாக இத்தாலி வெளியுறவு அமைச்சர் கிலியோ டெர்ஸி நேற்று (பிப்.20) எச்சரித்தார். இந்திய மீனவர்களைச் சுட்டதாகக் கைது செய்யப்பட்டிருக்கும் இத்தாலி கப்பலைச் சேர்ந்த இரு காவலர்களுக்கும் இந்தியச் சட்டத்திலிருந்து ‘பாதுகாப்பு’ இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். ‘இப்போதைக்கு இருநாடுகளுக்கும் இடையே சட்ட ரீதியான வேறுபாடுகள் உள்ளன. இந்த விவகாரத்தில் விரைவான தீர்வை எட்டுவதற்குத் தேவையான ஒத்துழைப்பு எதுவும் இந்தியாவுக்கும் இத்தாலிக்கும் இடையே இல்லை’ [...]

February 20 2012 | பதிவுகள் இந்தியா, சர்வதேசம் | செய்தி தொடர்ச்சி »

பத்மநாபசுவாமி கோயில் பொக்கிஷங்கள்: மதிப்பிடும் பணி தொடக்கம்

பத்மநாபசுவாமி கோயில் பொக்கிஷங்கள்: மதிப்பிடும் பணி தொடக்கம்

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில் பாதாள அறைகளில் உள்ள நகைகளை மதிப்பிடும் பணி இன்று காலை (பிப்.20) தொடங்கியது. கேரளாவின் புகழ்பெற்ற பத்மநாபசுவாமி கோயிலின் பொக்கிஷங்களை ஆவணப்படுத்தும்பணி இன்று காலை தொடங்கியது. பத்மநாபசுவாமி கோயிலில் பொக்கிஷங்கள் இருந்தது கடந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பொக்கிஷங்களை மதிப்பிட்டு ஆவணப்படுத்த உச்சநீதிமன்றம் 2 குழுக்களை நியமித்தது. எம்வி.நாயர் தலைமையில் ஒரு குழுவும், ஓய்வுபெற்ற நீதிபதி எம்என்.கிருஷ்ணன் தலைமையில் மற்றொரு குழுவும் அமைக்கப்பட்டது. இந்த குழுவில் கேரள அரசின் பிரதிநிதிகளும், திருவாங்கூர் மன்னர் [...]

February 20 2012 | பதிவுகள் இந்தியா | செய்தி தொடர்ச்சி »

உ.பி., 4ஆம் கட்ட தேர்தல் : 57% வாக்குப் பதிவு

உ.பி., 4ஆம் கட்ட தேர்தல் : 57% வாக்குப் பதிவு

உத்தரப் பிரதேசத்தில் நேற்று (பிப்.20) நடைபெற்ற 4-ம் கட்ட சட்டப்பேரவைத் தேர்தலில் 57 சதவீத வாக்குகள் பதிவாகின. லக்னோ, ரேபரேலி, அமேதி உள்பட 56 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்தத் தொகுதிகளில் உள்ள 1 கோடியே 72 லட்சம் வாக்காளர்களின் வசதிக்காக 18,608 சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. மொத்தம் 976 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 32 எம்.எல்.ஏ.க்களும், 12 முன்னாள் அமைச்சர்களும் அடங்குவர். வேட்பாளர்களில் 103 பேர் குற்றப் பின்னணி உடையவர்கள் என்று கூறப்படுகிறது. மிக [...]

February 20 2012 | பதிவுகள் இந்தியா | செய்தி தொடர்ச்சி »

மீனவர்கள் கொலை : இத்தாலிப் படையினர் நீதிமன்றத்தில் ஆஜர்

மீனவர்கள் கொலை : இத்தாலிப் படையினர் நீதிமன்றத்தில் ஆஜர்

கேரள மாநிலம் கொச்சி துறைமுகம் அருகே, இத்தாலியப் படையினர் நடத்திய தாக்குதலில், தமிழக மீனவர் உள்ளிட்ட 2 இந்திய மீனவர்கள் பலியாயினர். இச்சம்பவம் தொடர்பாக, அவர்களுக்கு தக்க தண்டனை வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் வாசன், கேரள முதல்வர் சாண்டி உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக, இத்தாலி பாதுகாப்புப் படையினர் 2 பேரை கொச்சி போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தாலியர் இருவர் [...]

February 20 2012 | பதிவுகள் இந்தியா | செய்தி தொடர்ச்சி »