தமிழ் செய்திகள் » விளையாட்டு “விளையாட்டு”

IPL – அதிரடியில் அசத்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்

IPL – அதிரடியில் அசத்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்

       சென்னை, ஏப் 12 , சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிரடி ஆட்டத்தால், ஐபிஎல் சீசன் 5-ன் 13-வது லீக் போட்டியில், பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் அணியை, சென்னை சூப்பர் கிங்ஸ் அபாரமாக வென்றது. இப்போட்டியில், 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி, 20 ஓவர்களில் 5 விக்கெடுகளை இழந்து இலக்கை எட்டியது. 12 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், 19-வது ஓவரில் களமிறங்கிய [...]

April 12 2012 | பதிவுகள் தமிழக செய்திகள், விளையாட்டு | செய்தி தொடர்ச்சி »

நாடு திரும்பிய யுவராஜ்சிங்கிற்கு சச்சின் வாழ்த்து

நாடு திரும்பிய யுவராஜ்சிங்கிற்கு சச்சின் வாழ்த்து

அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து தாயகம் திரும்பிய இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன்களில் ஒருவரான யுவராஜ்சிங்குக்கு நட்சத்திர கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர் தனது டுவிட்டர் இணையதளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். யுவராஜ்சிங் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தார். 60 நாட்கள் நடைபெற்ற புற்று நோய் சிகிச்சையில், அவருக்கு 3 முறை கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு ஓரளவு குணமடைந்தார். அமெரிக்காவில் சிகிச்சை எடுத்துக் கொண்டதற்குப் பிறகு ஒரு மாத கால ஓய்விற்காக லண்டன் சென்றார். [...]

April 9 2012 | பதிவுகள் விளையாட்டு | செய்தி தொடர்ச்சி »

தில்லி திரும்பினார் யுவராஜ் சிங்

தில்லி திரும்பினார் யுவராஜ் சிங்

அமெரிக்காவில் புற்றுநோய்க்கு சிகிச்சை மேற்கொண்ட கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் இன்று (ஏப்.9) காலை தில்லி திரும்பினார். அவரை விமானநிலையத்தில் ரசிகர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தில் தங்கி நுரையீரல் பகுதியில் இருந்த புற்றுநோய்க் கட்டிக்காக சிகிச்சை பெற்று வந்தார் யுவராஜ் சிங். அங்கு மூன்று கட்ட கீமோதெரபி சிகிச்சையை முடித்த அவர், அங்கிருந்து லண்டன் சென்றார். நண்பரின் வீட்டில் தங்கியிருந்த அவர் 3 மாதங்களுக்குப் பிறகு இன்று தில்லி [...]

April 9 2012 | பதிவுகள் விளையாட்டு | செய்தி தொடர்ச்சி »

ஐபிஎல்: புனே அணியிடம் வீழ்ந்தது பஞ்சாப் அணி

ஐபிஎல்: புனே அணியிடம் வீழ்ந்தது பஞ்சாப் அணி

ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்று இரவு (ஏப்.8) புனேயில் புதியதாக கட்டப்பட்ட ஸ்டேடியத்தில் நடந்த 8-வது லீக்கில் புனே வாரியர்ஸ்-கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின.சொந்த ஊர் மைதானத்தில் புனே அணி விளையாடுவது இதுவே முதல் முறையாகும். டாஸ் வென்று முதலில் களமிறங்கிய புனே அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 166 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் தரப்பில் ஹர்மீத்சிங் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். பின்னர் 167 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப் அணி, 20 [...]

April 9 2012 | பதிவுகள் விளையாட்டு | செய்தி தொடர்ச்சி »

ஐபிஎல் : கொல்கத்தா அணியை வென்றது ராஜஸ்தான் அணி

ஐபிஎல் : கொல்கத்தா அணியை வென்றது ராஜஸ்தான் அணி

ஏப்.4ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவில், நேற்று (ஏப்.8) இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் கொல்கத்தா- ராஜஸ்தான் அணிகள் விளையடிய முதல் போட்டி ஜெய்ப்பூரில் நேற்று மாலை 4 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் காம்பீர் பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி ராஜஸ்தான் ராயல்ஸ் களமிறங்கியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 164 குவித்தது. பின்னர் 165 ரன் எடுத்தால் வெற்றி [...]

April 9 2012 | பதிவுகள் விளையாட்டு | செய்தி தொடர்ச்சி »

இலங்கை-இங்கிலாந்து அணிகள் பங்கேற்ற டெஸ்ட் தொடர் சமன்

இலங்கை-இங்கிலாந்து அணிகள் பங்கேற்ற டெஸ்ட் தொடர் சமன்

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸட் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. காலேவில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இலங்கை அணி வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கடந்த 3-ந்தேதி கொழும்புவில் தொடங்கியது. டாஸ் [...]

April 7 2012 | பதிவுகள் விளையாட்டு | செய்தி தொடர்ச்சி »

சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க பரிந்துரை

சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க பரிந்துரை

நாட்டின் மிக உயரிய கெளரவமாக கருதப்படும் பாரத ரத்னா விருதுக்கு கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் பெயரை மகாராஷ்டிர அரசு பரிந்துரை செய்துள்ளது. மகாராஷ்டிர முதல்வர் பிருத்விராஜ் சவான் சட்டப்பேரவையில் இதை அறிவித்தார். உலகக் கோப்பைக்குப் பிறகு மகாராஷ்டிராவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களை கெளரவித்தோம். அப்போதே மண்ணின் மைந்தனான சச்சினுக்கு பாரத ரத்னா விருது வழங்க பரிந்துரைக்க வேண்டும் என்று முடிவுசெய்யப்பட்டது என சவான் தெரிவித்தார். முன்னாள் முதல்வர் யஷ்வந்தராவுக்கும் பாரத ரத்னா வழங்க வேண்டும் என்று [...]

April 5 2012 | பதிவுகள் இந்தியா, விளையாட்டு | செய்தி தொடர்ச்சி »

ஐபிஎல் போட்டி: மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி

ஐபிஎல் போட்டி: மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி

ஐபிஎல் டுவென்டி-20 சீசன் 5 தொடரின் முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வென்றது. இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, 5-வது ஐ.பி.எல் தொடரின் முதல் ஆட்டம் நேற்று (ஏப்.4) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஹர்பஜன்சிங்கை புதிய கேப்டனாகக் கொண்ட மும்பை [...]

April 4 2012 | பதிவுகள் சென்னை செய்திகள், விளையாட்டு | செய்தி தொடர்ச்சி »

ஐபிஎல் போட்டி நாளை தொடக்கம்: முதல் ஆட்டத்தில் சென்னை-மும்பை அணிகள்

ஐபிஎல் போட்டி நாளை தொடக்கம்: முதல் ஆட்டத்தில் சென்னை-மும்பை அணிகள்

சேப்பாக்கம் மைதானத்தில் நாளை (ஏப்.4) இரவு 8 மணிக்கு நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடவிருக்கின்றன. 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது இந்தியன் பிரிமீயர் லீக் (ஐ.பி.எல்.) என்று அழைக்கப்படும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி. தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இந்தப்போட்டி நடைபெற்று வருகிறது. 2008-ம் ஆண்டு நடந்த முதல் போட்டியில் வார்னே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் ஐ.பி.எல். கோப்பையை வென்றது. 2009-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடந்த 2-வது [...]

April 3 2012 | பதிவுகள் விளையாட்டு | செய்தி தொடர்ச்சி »

ஐபிஎல் போட்டி: சென்னையில் கோலாகல தொடக்கம்

ஐபிஎல் போட்டி: சென்னையில் கோலாகல தொடக்கம்

கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் ஐபிஎல் போட்டித் தொடருக்கான தொடக்க விழா இன்று மாலை (ஏப்.3) நடைபெறுகிறது. சென்னை Y.M.C.A மைதானத்தில் நடைபெறும் இந்த வண்ணமயமான விழாவில் அமிதாப் பச்சன் உள்ளிட்ட பாலிவுட் மற்றும் கோலிவுட் நட்சத்திரங்களும் கலந்துகொள்கின்றனர். இதையடுத்து நாளை தொடங்கும் முதல்போட்டியில் கடந்தாண்டு சாம்பியன் கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இதற்காக இருஅணி வீரர்களும், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். [...]

April 3 2012 | பதிவுகள் விளையாட்டு | செய்தி தொடர்ச்சி »