தமிழ் செய்திகள் » சென்னை செய்திகள் “சென்னை செய்திகள்”

கம்ப்யூட்டர் வரை படம் தயார்: கொள்ளையர்களை சுட்டுப்பிடிக்க உத்தரவு

கம்ப்யூட்டர் வரை படம் தயார்: கொள்ளையர்களை சுட்டுப்பிடிக்க உத்தரவு

வங்கி கொள்ளையர்கள் சென்னையில்தான் பதுங்கி இருக்க வேண்டும் என்று போலீசார் கருதுகிறார்கள். வங்கிக் கொள்ளையர்கள் எப்படி, இருந்தனர் என்று விசாரிக்கப்பட்டு புதிதாக கம்ப்யூட்டர் வரை படம் தயாரிக்கப்பட்டு வருகிறது. கீழ்க்கட்டளை வங்கிக் கொள்ளை சம்பவம் சென்னை மாநகர போலீசாருக்கு கடும் சவால் விட்டது போல உள்ளது. பெருங்குடி பரோடா வங்கியில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட போது, கொள்ளையர்களை நெருங்கி விட்டோ ம், ஓரிரு நாட்களில் பிடித்து விடுவோம் என்று போலீசார் கூறினார்கள். ஆனால் இதுவரை யாரும் சிக்கவில்லை. கொள்ளையர்கள் [...]

February 21 2012 | பதிவுகள் சென்னை செய்திகள் | செய்தி தொடர்ச்சி »

நாளை காங்கிரஸ் பேச்சாளர்கள் கூட்டம்

நாளை காங்கிரஸ் பேச்சாளர்கள் கூட்டம்

தமிழக காங்கிரஸ் கட்சியின் பேச்சாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் நாளை (பிப்.22) சத்தியமூர்த்திபவனில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் முதற்கட்டமாக தமிழகம் முழுவதிலுமுள்ள காங்கிரஸ் பேச்சாளர்கள் 110 பேர்கள் பங்கேற்கிறார்கள். இன்றைய அரசியல் சூழ்நிலை, மத்திய அரசின் சாதனைகள், தமிழகத்தின் நிலைப்பாடுகள், காங்கிரஸ் கட்சியின் நிலையினை மக்களுக்கு தெளிவுப்படுத்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் முன்னணி காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்று, உரையாற்றி சிறப்பிக்க உள்ளனர் என்று அக்கட்சி வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

February 21 2012 | பதிவுகள் சென்னை செய்திகள் | செய்தி தொடர்ச்சி »

தேமுதிக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் கூடியது

தேமுதிக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் கூடியது

தேமுதிக-வின் 7-வது செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், கட்சித் தலைவர் விஜயகாந்த் தலைமையில் வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் இன்று (பிப்.21)  நடந்தது. முதலில் செயற்குழு கூடியது. இதில் கலந்து கொள்வதற்காக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் 10 மணிக்கு காரில் வந்தார். அவரது கார் மட்டும் மண்டபத்துக்குள் அனுமதிக்கப்பட்டது. மற்ற அனைத்து கார்களும் சாலையின் இருபுறமும் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டன. விஜயகாந்த் வந்ததும் அவரது தலைமையில் செயற்குழு கூடியது. அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், பிரேமலதா விஜயகாந்த், [...]

February 21 2012 | பதிவுகள் சென்னை செய்திகள் | செய்தி தொடர்ச்சி »

ரயில் கட்டணம் உயராது: சென்னையில் ரயில்வே அமைச்சர் பேட்டி

ரயில் கட்டணம் உயராது: சென்னையில் ரயில்வே அமைச்சர் பேட்டி

மத்திய ரயில்வே அமைச்சர் திரிவேதி கொல்கத்தாவில் இருந்து விமானத்தில் சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு; கே: ரயில்வே பட்ஜெட்டில் புதிய ரயில் திட்டங்களுக்கான அறிவிப்பு வெளியாகுமா? ப: புதிய ரயில்கள் விடுவது மட்டும் நாட்டின் வளர்ச்சி ஆகாது. சமீபகால மாக ரெயில்வே துறையில் சரக்கு போக்குவரத்து பலமடங்கு அதிகரித்து உள்ளது. ரெயில்வே துறையை நவீனப்படுத்துதல், அபிவிருத்தி பணிகள், உள்கட்ட மைப்பு வசதிகளை உருவாக்குவது அவசியம் ஆகும். [...]

February 21 2012 | பதிவுகள் சென்னை செய்திகள் | செய்தி தொடர்ச்சி »

சங்கரன்கோவில் தேர்தல் பிரசாரத்தில் பயண செலவு சலுகை: பிரவீண்குமார் உத்தரவு

சங்கரன்கோவில் தேர்தல் பிரசாரத்தில் பயண செலவு சலுகை: பிரவீண்குமார் உத்தரவு

சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் தங்களது கட்சி வேட்பாளர்களின் பிரசாரத்திற்காக செல்லும் கட்சித் தலைவர்களின் பயண செலவு சலுகையைப் பெறுவதற்கு அவர்களின் பெயர் பட்டியலை 29-ந் தேதிக்குள் தர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் நேற்று (பிப்.20)  வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மக்கள் பிரதிநிதித்துவம் சட்டப் (1951) பிரிவு 77-ல் கூறியுள்ளபடி, அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது கட்சி வேட்பாளர்களுக்கு பிரசாரம் செய்வதற்காக விமானம் அல்லது வேறு எந்த வகையான போக்குவரத்து [...]

February 20 2012 | பதிவுகள் சென்னை செய்திகள் | செய்தி தொடர்ச்சி »

சங்கரன்கோவில் இடைத்தேர்தல் : திமுக-வுக்கு காங்., ஆதரவு – ஞானதேசிகன்

சங்கரன்கோவில் இடைத்தேர்தல் : திமுக-வுக்கு காங்., ஆதரவு – ஞானதேசிகன்

கடந்த பாராளுமன்ற பொதுத் தேர்தல் மற்றும் சட்டமன்ற பொதுத் தேர்தல் ஆகியவற்றில் தி.மு.க., மற்றும் காங்கிரஸ் கூட்டணியாக போட்டியிட்டன. மத்தியில் காங்கிரஸ் தலைமையில் அமைந்த ஆட்சியில் தி.மு.க.வும் பங்கேற்றது. சட்டசபை பொதுத் தேர்தலில் இந்த கட்சிகள் தோல்வி அடைந்தன. இந்த தோல்விக்கு காரணம் தி.மு.க. தான் என்று காங்கிரசாரும், காங்கிரஸ் தான் என்று தி.மு.க.வினரும் அரசல்புரசலாக பேசத் தொடங்கினார்கள். இந்த நிலையில் சட்டப்பேரவைத் தேர்தலை அடுத்து நடந்த தமிழக உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க.வும், காங்கிரசும் தனித்தே போட்டியிட்டன. [...]

February 20 2012 | பதிவுகள் சென்னை செய்திகள் | செய்தி தொடர்ச்சி »

பெரியார் பல்கலைக்காக முறைகேடு : ஆய்வுக்குபின் நடவடிக்கை-லஞ்ச ஒழிப்பு போலீஸார்

பெரியார் பல்கலைக்காக முறைகேடு : ஆய்வுக்குபின் நடவடிக்கை-லஞ்ச ஒழிப்பு போலீஸார்

பெரியார் பல்கலைக்கழகத்தில் நடந்ததாக கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான வழக்கில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்த பின்னரே நடவடிக்கை எடுக்கப்படும் என்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர். பெரியார் பல்கலைக் கழகத்தில் 3 மாணவர்கள் முறைகேடான வகையில் தேர்ச்சி பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக, லஞ்ச ஒழிப்புத் துறையினர் பெரியார் பல்கலைக் கழகத்தில் அதிரடி சோதனை நடத்தி மதிப்பெண் பட்டியல், சான்றிதழ்கள் உள்ளிட்ட ஆவணங்களை கைப்பற்றினர். இந்நிலையில், கைப்பற்றப்பட்டுள்ள ஆவணங்களை ஆய்வு செய்யும் பணி இன்னும் ஒரு வாரத்தில் [...]

February 20 2012 | பதிவுகள் சென்னை செய்திகள் | செய்தி தொடர்ச்சி »

பஸ் தின வன்முறை: நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

பஸ் தின வன்முறை: நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

பஸ் தினக் கொண்டாட்டம் வழக்கு தொடர்பாக, ‘தவறு செய்த எல்லா மாணவர்களையும் கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 3 வாரத்துக்குப் பிறகு இந்த வழக்கு விசாரணை மீண்டும் நடைபெறும்’ என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் கல்லூரி மாணவர்கள் பஸ் தினம் கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை மீறி சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கடந்த வியாழக்கிழமை பஸ் தினம் கொண்டாடினார்கள். திடீரென பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். அப்போது பஸ்கள் உடைக்கப்பட்டன. [...]

February 20 2012 | பதிவுகள் சென்னை செய்திகள் | செய்தி தொடர்ச்சி »

சென்னையில் பெண்ணிடம் செயின் பறிக்க முயன்றவர் கைது

சென்னையில் பெண்ணிடம் செயின் பறிக்க முயன்றவர் கைது

சென்னை பொன்னேரியைச் சேர்ந்த உஷா என்பவர் புழல் முகாம் அருகே ஆட்டோவில் வந்து இறங்கும்போது அவரது கழுத்தில் இருந்த செயினைப் பறித்துக் கொண்டு ஓட முயன்றவரை ஆட்டோ ஓட்டுநர் முருகா என்பவர் உதவியுடன் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் திருவேற்காட்டைச் சேர்ந்த முருகன்(28) என்பது தெரியவந்தது. பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார்.

February 20 2012 | பதிவுகள் சென்னை செய்திகள் | செய்தி தொடர்ச்சி »

சங்கரன்கோவில் இடைத்தேர்தல்: மதிமுக வேட்பாளர் அறிவிப்பு

சங்கரன்கோவில் இடைத்தேர்தல்: மதிமுக வேட்பாளர் அறிவிப்பு

மார்ச் 18ஆம் தேதி நடைபெறவுள்ள சங்கரன்கோவில் தொகுதி இடைத்தேர்தலில் மதிமுக சார்பில்  வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். சதன் திருமலை குமார் சங்கரன்கோவில் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மார்ச்.18ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக முத்துசெல்வி போட்டியிடுகிறார். தி.மு.க. வேட்பாளராக ஜவகர் சூரியகுமாரை தி.மு.க. தலைமை கழகம் அறிவித்துள்ளது. இதற்கிடையே மதிமுக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களிடம் ம.தி.மு.க. தலைமை அலுவலகமான தாயகத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ நேர்காணல் நடத்தினார். இதில் மதிமுக சார்பில் போட்டியிட [...]

February 20 2012 | பதிவுகள் சென்னை செய்திகள் | செய்தி தொடர்ச்சி »