தமிழ் செய்திகள் » சென்னை செய்திகள் “சென்னை செய்திகள்”

சிறுவன் தில்ஷன் கொலை வழக்கு: முன்னாள் ராணுவ அதிகாரிக்கு ஆயுள்

சிறுவன் தில்ஷன் கொலை வழக்கு: முன்னாள் ராணுவ அதிகாரிக்கு ஆயுள்

சென்னை தீவுத்திடலில் ராணுவ குடியிருப்பிற்குள் நுழைந்த தில்ஷன் என்ற சிறுவன் சுடப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் ராணுவ அதிகாரி ராம்ராஜுக்கு ஆயுள் தண்டனை விதித்து உயர்நீதிமன்றம் இன்று (ஏப்.20) தீர்ப்பு வழங்கியது. சென்னையில் அப்பாவி சிறுவன் தில்ஷன், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ராம்ராஜால் கொல்லப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. கடந்த வருடம் ஜுலை  3ம் தேதி ராணுவ குடியிருப்பு பகுதிக்குள் இருந்த மரத்தில் பாதாங்கொட்டை பறிக்க சென்றான். அப்போது அங்கு வந்த ஓய்வு [...]

April 20 2012 | பதிவுகள் சென்னை செய்திகள் | செய்தி தொடர்ச்சி »

பல் மருத்துவமனைகளை தரம் உயர்த்த ரூ.10 கோடி:ஜெயலலிதா

பல் மருத்துவமனைகளை தரம் உயர்த்த ரூ.10 கோடி:ஜெயலலிதா

சென்னையில் பல் மருத்துவமனைகளை தரம் உயர்த்த ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக சட்டசபையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். அண்டை மாநில மக்களும் சிகிச்சைக்காக வருவதால் கூடுதல் கட்டிடங்களும் கட்டப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். சென்னை அரசு பல் மருத்துவக் கல்லூரியை ஒப்புயர்வு மையமாக தரம் உயர்த்த ரூ 10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதுதொடர்பாக சட்டப்பேரவையில் 110-வது விதியின்கீழ் அவர் இன்று வெளியிட்ட அறிவிப்பு: நோயற்ற வாழ்வாகிய குறைவற்ற [...]

April 20 2012 | பதிவுகள் சென்னை செய்திகள் | செய்தி தொடர்ச்சி »

மீண்டும் விசாரணைக்கு வருகிறது காஞ்சீபுரம் அர்ச்சகர் தேவநாதன் வழக்கு

மீண்டும் விசாரணைக்கு வருகிறது காஞ்சீபுரம் அர்ச்சகர் தேவநாதன் வழக்கு

அர்ச்சகர் தேவநாதன் வழக்கு அடுத்த மாதம் (மே) 16ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. எனவே இந்த வழக்கு மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. காஞ்சீபுரம் செக்ஸ் அர்ச்சகர் தேவநாதன் வழக்கு மே மாதம் 16ஆம் தேதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. காஞ்சீபுரம் அடுத்த பழைய சீவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தேவநாதன் (35). இவர் காஞ்சீபுரம் பஸ் நிலையம் அருகே உள்ள மச்சேஸ்வரர் கோவில் அர்ச்சகராக இருந்தார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கோவில் கருவறையில் பல பெண்களிடம் [...]

April 19 2012 | பதிவுகள் சென்னை செய்திகள் | செய்தி தொடர்ச்சி »

அழகிரியைப் பற்றி பேசியதால் பேரவையில் அமளி: திமுக எம்எல்ஏ-க்கள் ‘சஸ்பெண்டு’

அழகிரியைப் பற்றி பேசியதால் பேரவையில் அமளி: திமுக எம்எல்ஏ-க்கள் ‘சஸ்பெண்டு’

சட்டப்பேரவையில் இன்று (ஏப்.19) வேளாண்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. இதில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தமிழரசன் கலந்து கொண்டு பேசினார். அப்போது கடந்த ஆட்சியின்போது மதுரையில் மு.க. அழகிரி பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரால் மதுரைக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. மதுரையில் வெட்டு குத்து போன்றவைதான் நடந்தது என்று குறிப்பிட்டார். உடனே தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். சபாநாயகர் ஜெயக்குமார்:- இது உறுப்பினரின் கன்னிப் பேச்சு. ஒரு உறுப்பினர் முதன் முதலாக பேசும்போது மற்றவர்கள் [...]

April 19 2012 | பதிவுகள் சென்னை செய்திகள் | செய்தி தொடர்ச்சி »

தமிழ்ப் புத்தாண்டு : கருணாநிதி குற்றச்சாட்டுக்கு ஜெயலலிதா விளக்கம்

தமிழ்ப் புத்தாண்டு : கருணாநிதி குற்றச்சாட்டுக்கு ஜெயலலிதா விளக்கம்

சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜெயலலிதா, செ.கு. தமிழரசன் எம்.எல்.ஏ. எழுப்பிய வினாவிற்கு அளித்த விளக்கவுரை வருமாறு:- 13.4.2012 அன்று நடைபெற்ற சித்திரை தமிழ்ப்புத்தாண்டு விழாவில் கலந்து கொண்டு, சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்பதற்கான காரணங்கள் எவை என நான் எடுத்துக் கூறியது மக்கள் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளதைக் கண்டு, பொறுத்துக் கொள்ள முடியாத கருணாநிதி, வீண் விதண்டா வாதங்களை தனது கட்டுரையில் எடுத்து வைத்துள்ளார். சித்திரை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டுக்கு உரிய பொருத்தமான நாள் ஆகும் [...]

April 19 2012 | பதிவுகள் சென்னை செய்திகள் | செய்தி தொடர்ச்சி »

ஏப்.29 தமிழகம் முழுவதும் பெட்ரோல் பங்க்குகள் மூடல்

ஏப்.29 தமிழகம் முழுவதும் பெட்ரோல் பங்க்குகள் மூடல்

தமிழ்நாடு பெட்ரோலியம் விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் எம்.கண்ணன், செயலாளர் குமரப்பன், பொருளாளர் சண்முகம் ஆகியோர் சென்னையில் இன்று (ஏப்.19) செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:- அனைத்திந்திய பெட்ரோல் விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு சார்பாக நடந்த அவசர கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, வருகிற 22ஆம் தேதி நள்ளிரவு முதல் 23ஆம் தேதி நள்ளிரவு வரை ஒருநாள் மட்டும் தமிழகத்தில் அனைத்து பெட்ரோல் நிலையங்களும் மூடப்படுகிறது. ஆபூர்வ சந்திரா கமிட்டி பரிந்துரையினை உடனடி யாக அமல்படுத்த வேண்டும். கமிட்டி பரிந்துரைத்துள்ள [...]

April 19 2012 | பதிவுகள் சென்னை செய்திகள் | செய்தி தொடர்ச்சி »

முதல் செயற்கை கோள் : இன்று பயணம் மேற்கொண்ட நாள்

முதல் செயற்கை கோள் : இன்று பயணம் மேற்கொண்ட நாள்

எந்த ஒரு செயலுக்கும் முதல்படி முக்கியம் அந்த வரிசையில் 1975-ம் ஆண்டு இதே நாளில்தான்  (ஏப்.,19) இந்தியாவின் முதல் செயற்கைகோளான ஆர்யபட்டா விண்ணில் ஏவப்பட்டது. இதன் மூலம் விண்வெளி துறையில் இந்தியாவும் கால் பதித்தது.

April 19 2012 | பதிவுகள் சென்னை செய்திகள் | செய்தி தொடர்ச்சி »

சென்னை ஓபன் சீரிஸ் பாட்மின்டன்: தமிழக அரசு முடிவு

சென்னை ஓபன் சீரிஸ் பாட்மின்டன்: தமிழக அரசு முடிவு

சென்னை ஓபன் டென்னிஸ் தொடர் மற்றும் ஸ்குவாஷ் போட்டிகளின் வெற்றியை அடுத்து, சென்னையில் சூப்பர் சீரிஸ் பாட்மின்டன் தொடரை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. சட்டப்பேரவையில் இதுகுறித்து தெரிவித்த தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் சிவபதி, சென்னையில் நடத்தப்பட்டு வரும் சென்னை ஓபன் டென்னிஸ் மற்றும் ஸ்குவாஷ் போட்டிகளின் வெற்றியையடுத்து, சென்னை சூப்பர் சீரிஸ் பாட்மின்டன் தொடர் நடத்தப்படும் என்று கூறினார். இதற்காக முதற்கட்டமாக ஒரு கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாகவும் அவர் [...]

April 19 2012 | பதிவுகள் சென்னை செய்திகள், விளையாட்டு | செய்தி தொடர்ச்சி »

’3′ படத்திற்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை – ரஜினிகாந்த்

’3′ படத்திற்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை – ரஜினிகாந்த்

’3′ படத்தின் வியாபாரத்திற்கும் எனக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை. இது தொடர்பாக வெளியான செய்திகள் அனைத்தும் பொய்யானவை என்று ரஜினிகாந்த் தெரிவித்திருக்கிறார். ரஜினியின் மூத்த மகளும், நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா,  தனுஷ் மற்றும் ஸ்ருதி ஹாசனை வைத்து ’3′ என்ற படத்தை இயக்கினார். தமிழ், தெலுங்கில் வெளியான இப்படம், இரண்டு மொழிகளிலும் பெரும் நஷ்ட்டத்தை சந்தித்து இருக்கிறது. இப்படம் வெளியாவதற்கு முன்பு இப்படத்தில் இடம்பெற்ற கொலைவெறி என்ற பாடல் இந்திய அளவில் பிரபலமானது. இதன் அடிப்படையில் [...]

April 19 2012 | பதிவுகள் சென்னை செய்திகள், தமிழ் சினிமா செய்திகள் | செய்தி தொடர்ச்சி »

இலங்கையில் தனி ஈழம்: இந்தியா ஆதரவு தர வேண்டும் – கருணாநிதி

இலங்கையில் தனி ஈழம்: இந்தியா ஆதரவு தர வேண்டும் – கருணாநிதி

இலங்கையில் தமிழீழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்த மத்திய அரசு ஆதரவு தர வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக நேற்று (ஏப்.17) அவர் வெளியிட்ட அறிக்கை: தனி ஈழம் தொடர்பாக பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை இப்போது எழுந்துள்ளது. இந்தக் கோரிக்கை வரவேற்கத்தக்கது. ஐ.நா.சபையின் தலையீட்டின் பேரில் இதுபோல வாக்கெடுப்பு நடத்தப்பட்டு ஒரு சில நாடுகள் தனி நாடு என்ற அங்கீகாரத்தைப் பெற்றிருக்கின்றன. அதன் அடிப்படையில் தமிழர்கள் மத்தியில் [...]

April 18 2012 | பதிவுகள் சென்னை செய்திகள் | செய்தி தொடர்ச்சி »