தமிழ் செய்திகள் » தமிழக செய்திகள் “தமிழக செய்திகள்”

மதுரையில் நரபலி – குற்றவாளிகள் கைது

மதுரையில் நரபலி – குற்றவாளிகள் கைது

        மதுரை, ஏப்.29, மதுரை அருகே சிறுமியை நரபலி கொடுத்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். 16 மாதத்திற்கு பின்பு, இந்த வழக்கில் துப்பு துலங்கியுள்ளது. சிறுமி மாயம் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகில் உள்ள கச்சைக்கட்டி கிராமத்தை சேர்ந்தவர் தொத்தன் என்ற தொத்தல், விவசாய கூலி தொழிலாளி. இவருடைய மனைவி அன்னக்கிளி. இவர்களுக்கு 2 குழந்தைகள். இளைய குழந்தையான 5 வயது சிறுமி ராஜலட்சுமி, அங்குள்ள பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தாள். இந்த [...]

April 28 2012 | பதிவுகள் தமிழக செய்திகள் | செய்தி தொடர்ச்சி »

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 : மே 28க்குள் விண்ணப்பிக்க வேண்டும்; ஜுலை 7ல் தேர்வு

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 : மே 28க்குள் விண்ணப்பிக்க வேண்டும்; ஜுலை 7ல் தேர்வு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் (குரூப் 4) இளநிலை உதவியாளர் 10,718 பணியிடங்கள், செயல் அலுவலர் 75 பணியிடங்கள் என மொத்தம் 10,793 காலியிடங்களை நிரப்ப ஜுலை 7-ல் தேர்வு நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிக்கை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளங்களில் (www.tnpsc.gov.in  மற்றும் www.tnpscexams.net) வெளியிடப்பட்டுள்ளது. குரூப் 4 தேர்வுகள் தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்தது. இதனால், இளநிலை உதவியாளர் போன்ற பணியிடங்கள் அரசு அலுவலகங்களில் பெருமளவு காலியாக இருந்தன. இந்த [...]

April 28 2012 | பதிவுகள் சென்னை செய்திகள் | செய்தி தொடர்ச்சி »

சுதாகரன் மீதான வழக்கு: குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

சுதாகரன் மீதான வழக்கு: குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

போதைப் பொருள் வைத்திருந்ததாக, சுதாகரன் உள்ளிட்டோ ர் மீது தொடரப்பட்ட வழக்கில், திருத்தப்பட்ட குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய, சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. விசாரணையை, மே 18ம் தேதிக்கு தள்ளிவைத்தது. சுதாகரனின் தி.நகர் வீட்டில், 16 கிராம், ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில், 71 கிராம் “ஹெராயின்’ எனும் போதைப் பொருள் கைப்பற்றியதாக, சுதாகரன் மீது, தனித்தனியாக இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. போதைப் பொருளின் சுத்தத்தன்மை பற்றி சோதிக்க, இதன் மாதிரி அனுப்பப்பட்டது. சோதனை அறிக்கை, தில்லியில் [...]

April 28 2012 | பதிவுகள் சென்னை செய்திகள் | செய்தி தொடர்ச்சி »

சென்னையில் 18 வருட காலண்டரை துல்லியமாக சொல்லி அசத்தும் அதிசய சிறுவன்

சென்னையில் 18 வருட காலண்டரை துல்லியமாக சொல்லி அசத்தும் அதிசய சிறுவன்

       சென்னை, ஏப் 24 , ஆண்டின் தேதி, கிழமையை கேட்டால் உடனடியாக, பதில் சொல்லி ஆச்சரியப்பட வைக்கிறான் சிறுவன் ஸ்ரீராம் பாலாஜி. 2030-ம் ஆண்டில் ஒரு மாதத்தையும், தேதியையும் சொன்னால் கிழமையை துல்லியமாக சொல்கிறான் 10 வயது சிறுவன். அதெப்படி…? என்று யோசிக்கிறீர்களா? அவனுடைய அற்புத ஆற்றலை பார்த்து எல்லோருமே அதிசயித்து போகிறார்கள். வேளச்சேரி சீதாபதி நகரில் வசிக்கும் வேலுசாமி, ஜீவப்ரியா தம்பதியருக்கு எட்டாவது வகுப்பு படிக்கும் விஷ்ணுப்ரியா என்ற மகளும், ஐந்தாவது வகுப்பு [...]

April 24 2012 | பதிவுகள் தமிழக செய்திகள் | செய்தி தொடர்ச்சி »

வங்கிக்கொள்ளையர்கள் என்கவுண்டர் – சட்டசபையில் முதல்வர் விளக்கம்

வங்கிக்கொள்ளையர்கள் என்கவுண்டர் – சட்டசபையில் முதல்வர் விளக்கம்

       சென்னை, ஏப் 24 , சென்னை பெருங்குடியில் வங்கிக் கொள்ளையர்களை போலீசார் சுட்டது ஏன் என்பது குறித்து சட்டசபையில் நேற்று விளக்கம் அளித்த முதல்வர் ஜெயலலிதா, கொள்ளையர்கள் சுட்டதால்தான் போலீசார் வேறுவழியின்றி திருப்பிச் சுட்டனர் என்றார். காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்துப் பேசுகையில் இது தொடர்பாக விளக்கம் அளித்த ஜெயல்லிதா,”சென்னை, பெருங்குடியிலுள்ள பாங்க் ஆப் பரோடா வங்கியில், 23.1.2012 அன்று மதியம் சுமார் 1.45 மணியளவில் ரூ.19 லட்சத்தையும், 20.2.2012 அன்று, [...]

April 24 2012 | பதிவுகள் தமிழக செய்திகள் | செய்தி தொடர்ச்சி »

புதுக்கோட்டை இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர் அறிவிப்பு

புதுக்கோட்டை இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர் அறிவிப்பு

புதுக்கோட்டை தொகுதிக்கு நடைபெற உள்ள இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் கார்த்திக் தொண்டைமான் போட்டியிடுகிறார். புதுக்கோட்டை தொகுதி இடைத்தேர்தலுக்கான அ.தி.மு.க., வேட்பாளர் இன்று (ஏப்.24) அறிவிக்கப்பட்டு விட்டார். இந்த தொகுதியை பொறுத்தவரை நல்ல செல்வாக்கு கொண்டவர் என்பதாலும், குறிப்பாக மன்னர் குடும்பத்தை சேர்ந்தவர் என்பதாலும் இவரது வெற்றிக்கு பெரும் சிரமம் இருக்காது என இப்பகுதி அ.தி.மு.க.,வினர் கருத்து தெரிவித்துள்ளனர். கடந்த ஏப்- 1 ம் தேதி புதுக்கோட்டை தொகுதியின் இ.,கம்யூ., கட்சியின் எம்.எல்.ஏ., முத்துக்குமரன் விபத்தில் சிக்கி பலியானார். [...]

April 24 2012 | பதிவுகள் தமிழக செய்திகள் | செய்தி தொடர்ச்சி »

புதுக்கோட்டை இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு

புதுக்கோட்டை இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு

புதுக்கோட்டை இடைத்தேர்தல் ஜுன் 12ம் தேதி நடைபெறும் என தமிழக தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மே 18ம் தேதி துவங்கும் . மே 26ம் தேதி மனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாளாகும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து புதுக்கோட்டை தொகுதியில் தேர்தல் விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருகிறது.

April 24 2012 | பதிவுகள் தமிழக செய்திகள் | செய்தி தொடர்ச்சி »

கலெக்டரை மீட்க நடவடிக்கை: பிரதமருக்கு வைகோ கடிதம்

கலெக்டரை மீட்க நடவடிக்கை: பிரதமருக்கு வைகோ கடிதம்

மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட சுக்மா மாவட்ட ஆட்சியர் அலெக்ஸ் பால்மேனனை பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மன்மோகன் சிங்குக்கு மதிமுக பொதுச்செயலர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக பிரதமருக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது: சத்தீஸ்கர் மாநிலத்தின், சுக்மா மாவட்ட ஆட்சித் தலைவர் அலெக்ஸ் பால் மேனன், ஏப்ரல் 21 ஆம் நாள், மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட செய்தி அறிந்து, அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். தமிழ்நாட்டைச் சேர்ந்த மேனன், தன்னலம் அற்ற மக்கள் சேவைக்காகத் [...]

April 23 2012 | பதிவுகள் சென்னை செய்திகள் | செய்தி தொடர்ச்சி »

பேரவைக்கு திமுக உறுப்பினர்கள் வரவில்லை

பேரவைக்கு திமுக உறுப்பினர்கள் வரவில்லை

தமிழகச் சட்டப்பேரவையில் இருந்து ஏ.வ.வேலு, கம்பம் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் இன்று பேரவையை புறக்கணித்தனர். முன்னதாக அவையில் ஒழிக கோஷம் போட்டதாகக் கூறி 4 திமுக உறுப்பினர்கள் கடந்த வாரம் 10 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

April 23 2012 | பதிவுகள் சென்னை செய்திகள் | செய்தி தொடர்ச்சி »

அரசியலுக்கு இப்போதைக்கு வரமாட்டேன்: உதயநிதி ஸ்டாலின்

அரசியலுக்கு இப்போதைக்கு வரமாட்டேன்: உதயநிதி ஸ்டாலின்

நான் சினிமாவுக்கு வருவேன் என நினைத்துக்கூட பார்த்ததில்லை, ஆனால் சினிமா தயாரிப்பாளராக, நடிகராகியுள்ளேன். இப்போதைக்கு’ அரசியலுக்கு வரமாட்டேன் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தை தயாரித்து, அதில் கதாநாயகனாக நடித்துள்ள உதயநிதி ஸ்டாலின் மதுரையில் செய்தியாளர்களிடம் நேற்று பேட்டி அளித்தார். சினிமா தயாரிப்பில் மட்டுமே எனது கவனம் இருந்தது. பெரும்பாலான நடிகர்கள் எனது நெருங்கிய நண்பர்கள். அவர்களும், எனது குடும்பத்தினரும் ஊக்கப்படுத்தியதால் நடிக்க ஒப்புக் கொண்டேன். எனது முதல் படத்தில் பல்வேறு [...]

April 23 2012 | பதிவுகள் தமிழக செய்திகள் | செய்தி தொடர்ச்சி »