தமிழ் செய்திகள் » சர்வதேசம் “சர்வதேசம்”

தலீபான்கள் தாக்குதல்: ஆப்கானிஸ்தானில் இந்தியர்களுக்கு பாதிப்பு இல்லை- மத்திய அரசு

தலீபான்கள் தாக்குதல்: ஆப்கானிஸ்தானில் இந்தியர்களுக்கு பாதிப்பு இல்லை- மத்திய அரசு

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் நடத்திய தாக்குதலால் இந்தியர்களுக்கு பாதிப்பு இல்லை என்று மத்திய அரசு தெரிவித்து உள்ளது. தலீபான்கள் நடத்திய இந்த தாக்குதலில், காபூலில் உள்ள இந்திய தூதரகம் எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை. இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறி இருப்பதாவது:- தலீபான்கள் தாக்குதல் நடத்திய இடம், இந்திய தூதரகத்தில் இருந்து மூன்று, நான்கு கி.மீ. தூரத்தில் உள்ளது. இந்த தாக்குதலில் இந்திய தூதரகத்துக்கோ, ஊழியர்களுக்கோ எந்த பாதிப்பும் இல்லை. இருப்பினும், இந்திய தூதரகத்துடன் தொடர்ந்து தொடர்பு கொண்டு, [...]

April 16 2012 | பதிவுகள் சர்வதேசம் | செய்தி தொடர்ச்சி »

காபூலில் தலிபான்கள் கடும் தாக்குதல்

காபூலில் தலிபான்கள் கடும் தாக்குதல்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் 7 முக்கிய இடங்களில் தலிபான்கள் நேற்று (ஏப்.15) தாக்குதல் நடத்தினர். நாடாளுமன்றக் கட்டடம், நேட்டோ படைகளின் தலைமையகம், அமெரிக்க, பிரிட்டன் தூதரகங்களைக் குறி வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் ஜலாலாபாத் சாலையில் உள்ள ராணுவப் பயிற்சி மையத்திலும் தாக்குதல் நடந்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. காபூலுக்கு அருகேயுள்ள வேறு 3 நகரங்களிலும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். இந்தக் தாக்குதல்களில் 14 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் 14 போலீஸார், 9 பொதுமக்கள் [...]

April 15 2012 | பதிவுகள் சர்வதேசம் | செய்தி தொடர்ச்சி »

அமெரிக்காவில் இந்திய வாலிபர் சுட்டுக்கொலை

அமெரிக்காவில் இந்திய வாலிபர் சுட்டுக்கொலை

அமெரிக்காவில் இந்தியாவைச் சேர்ந்த 20 வயது இளைஞர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். இனவெறி காரணமாக இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. பஞ்சாப் மாநிலம் ஜலாந்தர் மாவட்டத்தைச்சேர்ந்தவர் ராகுல்ஷர்மா. 20 வயதான ராகுல்ஷர்மாவின் உறவினர்கள் அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ளனர். ராகுல்ஷர்மா, தனது தந்தை பாரன்ஷர்மா, தாய் தேவேந்தர் ஷர்மா, இரு சகோதரிகள் ஆகியோருடன் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவின் பிரிமவுண்ட் நகரில் குடியேறினார். இந்நிலையில் நேற்று முன்தினம் சொந்த விஷயமாக தனது வீட்டிலிருந்து கிளம்பி வெளியே சென்றார். [...]

April 14 2012 | பதிவுகள் சர்வதேசம் | செய்தி தொடர்ச்சி »

தென்கொரிய நாடாளுமன்ற தேர்தல்: மீண்டும் ஆட்சியைபிடித்தது ஆளுங்கட்சி

தென்கொரிய நாடாளுமன்ற தேர்தல்: மீண்டும் ஆட்சியைபிடித்தது ஆளுங்கட்சி

தென் கொரிய நாடாளுமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் ஆளும் புதிய முன்னணி கட்சி, 152 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. மொத்தமுள்ள 300 தொகுதிளில் ஆளும் புதிய முன்னணி கட்சிக்கு 165 தொகுதிகளும், எதிர்கட்சியான ஐக்கிய ஜனநாயகக் கட்சிக்கு 89 தொகுதிகளும் உள்ளன. இதற்கிடையே இம்மாதம் 11ம் தேதி இந்த 300 தொகுதிகளுக்கான நாடாளுமன்ற தேர்தல் அமைதியாக நடந்தது. தேர்தல் முடிவு கருத்து கணிப்புகள் தடை செய்யப்பட்டிருந்ததால், எந்த கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்பது யாருக்கும் [...]

April 14 2012 | பதிவுகள் சர்வதேசம் | செய்தி தொடர்ச்சி »

ஒசாமா குடும்பம் சவுதி செல்கிறது

ஒசாமா குடும்பம் சவுதி செல்கிறது

சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஒசாமாவின் 3 மனைவிகள் மற்றும் அவரது குழந்தைகளின் காவல், வரும் ஏப்ரல் 17ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து அவர்கள் அனைவரும் சவுதிக்கு அனுப்பப்படுவார்கள் என தெரிகிறது.

April 13 2012 | பதிவுகள் சர்வதேசம் | செய்தி தொடர்ச்சி »

சுனாமி எச்சரிக்கை விடப்பட்ட நாடுகள்

சுனாமி எச்சரிக்கை விடப்பட்ட நாடுகள்

இந்தோனேஷியாவில் சுமத்ரா தீவை மையம் கொண்டு இன்று (ஏப்.11) கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 8.9 அளவாக பதிவானது. இதையடுத்து இந்தோனேஷியா உள்ளிட்ட 28 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. இந்தியா, இந்தோனேஷியா, தாய்லாந்து, மாலத்தீவு, மியான்மர், ஆஸ்திரேலியா, இலங்கை, மலேசியா, பாகிஸ்தான், சோமாலியா, ஓமன், ஈரான், பங்களாதேஷ், கென்யா, தென்ஆப்பிரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

April 11 2012 | பதிவுகள் சர்வதேசம் | செய்தி தொடர்ச்சி »

முதல் நிலநடுக்கம் சுனாமியை ஏற்படுத்தாது – அமெரிக்கா

முதல் நிலநடுக்கம் சுனாமியை ஏற்படுத்தாது – அமெரிக்கா

இந்தோனேசியாவில் ஏற்பட்ட முதல் நிலநடுக்கத்தை அடுத்து 2 மணி நேரம் கழித்து மீண்டும் அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டதன் தாக்கம் தான் தமிழகத்தில் மீண்டும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், முதலில் இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் சுனாமியை ஏற்படுத்தும் நிலநடுக்கம் அல்ல என்றும், அடுத்து ஏற்பட்டுள்ள நிலநடுக்கமே சுனாமியை ஏற்படுத்தும் என்றும் அமெரிக்க புவியியல் ஆய்வு மைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஆனால் அதுவும் இந்தியாவிற்கு செல்லும் அளவிற்கு பயங்கர சுனாமியாக இருக்காது என்றும் கூறியுள்ளார்.

April 11 2012 | பதிவுகள் சர்வதேசம் | செய்தி தொடர்ச்சி »

சுனாமி எச்சரிக்கை :அனைத்து நாடுகளிலும் வாபஸ்

சுனாமி எச்சரிக்கை :அனைத்து நாடுகளிலும் வாபஸ்

இந்தோனேஷியாவில் இன்று மதியம் சுமத்ரா தீவை மையம் கொண்டு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 8.9 ஆக பதிவானது. இதையடுத்து இந்தோனேஷியா உள்ளிட்ட 28 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது கிடைத்துள்ள தகவலின் படி, பசுபிக் சுனாமி மையம் அறிவித்திருந்த சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்ட கடற்பகுதியை கண்காணித்து வந்ததில் ஆபத்தை விளைவிக்கும் சுனாமி அலைகள் ஏற்படவில்லை. இதனால் கண்காணிப்பு நிறுத்தப்படுகிறது என்றும் 28 நாடுகளுக்குவிடப்பட்ட [...]

April 11 2012 | பதிவுகள் சர்வதேசம் | செய்தி தொடர்ச்சி »

இந்தோனேசியாவில் கடும் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை

இந்தோனேசியாவில் கடும் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை

இந்தோனேசியாவில் இன்று (ஏப்.11) கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 8.9 எனப் பதிவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இந்தியா஡ உள்ளிட்ட 28 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் எதிரொலியாக தமிழகத்திலும் நில அதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.5 எனப் பதிவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னையில் நிலநடுக்கம் காரணமாக பொதுமக்கள் பீதி அடைந்து தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களில் கூடினர். இந்த நில அதிர்வு [...]

April 11 2012 | பதிவுகள் சர்வதேசம் | செய்தி தொடர்ச்சி »

சோமாலிய கொள்ளையர்கள் அட்டகாசம் : 17 இந்தியர்களுடன் கப்பல் கடத்தல்

சோமாலிய கொள்ளையர்கள் அட்டகாசம் : 17 இந்தியர்களுடன் கப்பல் கடத்தல்

நைஜீரியாவுக்கு  சென்றுகொண்டிருந்த துபை நாட்டு கப்பலை சோமாலிய கடல்கொள்ளையர்கள் கடத்திச் சென்றனர். இந்த கப்பலில் 17 இந்தியர்கள் உள்ளிட்ட 22 பேர் உள்ளனர். ஷார்ஜா துறைமுகத்தில் இருந்து நைஜீரியா சென்றுகொண்டிருந்தபோது மார்ச் 2-ம் தேதி எம்டி ராயல் கிரேஸ் என்ற பெயருடைய அந்த கப்பல் கடத்தப்பட்டுள்ளது. அந்த கப்பலில் இந்தியர்கள் தவிர 3 நைஜீரியர்கள், ஒரு பாகிஸ்தானியர் ஒரு வங்கதேசத்தவர் ஆகியோரும் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

April 9 2012 | பதிவுகள் சர்வதேசம் | செய்தி தொடர்ச்சி »